ETV Bharat / state

வேலூரில் குடும்ப அட்டை வேண்டி பதிவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி! - Vellore Collector

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 6:52 PM IST

Vellore Collector: வேலூரில் பெண் ஒருவர் இறந்துவிட்டதாக குடும்ப அட்டையில் பதிவான நிலையில், இறந்ததாக கூறப்படும் பெண் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பாதிக்கப்பட்ட நபர்
பாதிக்கப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சின்ன மிட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா(21) இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தந்தையின் குடும்ப அட்டையில் இருந்து தனது பெயரை நீக்கி, கணவரின் குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக இ-சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், பூஜாவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் தகவல் வந்திருக்கிறது. அதில், பூஜா இறந்துவிட்டதாகவும், பூஜாவின் ஆதார் எண் பிளாக் ஆகி இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா தனது அப்பாவுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் இன்று (ஆக 5) நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு அளித்து இறப்பு பதிவேட்டில் இருந்து பெயரை நீக்க, புதிய குடும்ப அட்டை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக பூஜாவின் தந்தை கூறியதாவது, " எனது மகள் இறந்துவிட்டதாக வந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக" தெரிவித்துள்ளார்.

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சின்ன மிட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா(21) இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தந்தையின் குடும்ப அட்டையில் இருந்து தனது பெயரை நீக்கி, கணவரின் குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக இ-சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், பூஜாவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் தகவல் வந்திருக்கிறது. அதில், பூஜா இறந்துவிட்டதாகவும், பூஜாவின் ஆதார் எண் பிளாக் ஆகி இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா தனது அப்பாவுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் இன்று (ஆக 5) நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு அளித்து இறப்பு பதிவேட்டில் இருந்து பெயரை நீக்க, புதிய குடும்ப அட்டை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக பூஜாவின் தந்தை கூறியதாவது, " எனது மகள் இறந்துவிட்டதாக வந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக" தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பிரதமர் மோடி வயநாட்டுக்கு சென்றால் தான் அதிசயம்! - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கிண்டல் - Relief materials to Wayanad

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.