ETV Bharat / state

ராசிமணல் அணை பணி எப்போது துவக்கம்? மத்திய, மாநில அரசை வலியுறுத்தி பேரணி - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு! - P R pandian

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 1:44 PM IST

P.R.Pandian Talk about Rasimanal Dam: ராசிமணலில் அணை கட்ட மத்திய, மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற ஜூன் 10ஆம் தேதி பூம்புகார் பேரணி துவக்க உள்ளதாக பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்த புகைப்படம்
பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்த புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: சீர்காழியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, அமராவதி, சிறுவாணி உள்ளிட்ட அனைத்து நதிநீர் உரிமைகளும் பறிபோகி வருகிறது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள் பொறுப்புகளை தட்டிக் கழித்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து விடும்.

அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த ஒரு வாரமாக அனைத்து விவசாயச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை செய்து வருகிறோம். அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரமாக்கும் வகையில், சிறுவாணி அணை குறுக்கே சிலந்தி ஆற்றில் அணை கட்ட எதிர்க்கும் கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையை முற்றுகையிட உள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றியது உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது.

இதற்கு தமிழக அரசும் துணை போகிறது‌. வருகிற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த ஆண்டு கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 98 டிஎம்சி நிலுவை தண்ணீரையும், தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். மேகதாது அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

ராசிமணலில் அணை கட்ட மத்திய அரசு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி கடைமடை பகுதியான பூம்புகார் முகத்துவாரத்தில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த பேரணியானது மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், தருமபுரி வழியாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைச் சென்றடைய உள்ளது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை விரைந்து முடித்து, தண்ணீரை தேக்கி தெற்கு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

தற்பொழுது பருத்தி, நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "எல்லாருக்கும் தேங்க்ஸ்.." சிகிச்சை முடிந்து காட்டுக்குள் சென்ற பெண் யானை!

மயிலாடுதுறை: சீர்காழியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, அமராவதி, சிறுவாணி உள்ளிட்ட அனைத்து நதிநீர் உரிமைகளும் பறிபோகி வருகிறது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள் பொறுப்புகளை தட்டிக் கழித்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து விடும்.

அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த ஒரு வாரமாக அனைத்து விவசாயச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை செய்து வருகிறோம். அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரமாக்கும் வகையில், சிறுவாணி அணை குறுக்கே சிலந்தி ஆற்றில் அணை கட்ட எதிர்க்கும் கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையை முற்றுகையிட உள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றியது உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது.

இதற்கு தமிழக அரசும் துணை போகிறது‌. வருகிற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த ஆண்டு கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 98 டிஎம்சி நிலுவை தண்ணீரையும், தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். மேகதாது அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

ராசிமணலில் அணை கட்ட மத்திய அரசு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி கடைமடை பகுதியான பூம்புகார் முகத்துவாரத்தில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த பேரணியானது மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், தருமபுரி வழியாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைச் சென்றடைய உள்ளது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை விரைந்து முடித்து, தண்ணீரை தேக்கி தெற்கு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

தற்பொழுது பருத்தி, நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "எல்லாருக்கும் தேங்க்ஸ்.." சிகிச்சை முடிந்து காட்டுக்குள் சென்ற பெண் யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.