ETV Bharat / state

ஊபா சட்டத்தின் கீழ் 6 பேர் கைது; விசாரணை அறிக்கையை மாநில உள்துறைக்கு அனுப்பிய காவல்துறை! - 6 persons arrest UAPA Act

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 3:34 PM IST

Banned Organisation: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆறு பேர் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை, மாநில உள்துறைக்கு சென்னை போலீசார் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

file image
file image (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக சென்னை சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்தனர். குறிப்பாக, இவர்கள் பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஹிஜிபுதாகிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமியக் கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயற்சித்ததாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், பொறியாளர் அமீர் உசேன், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் மற்றும் முகமது மவுரிஸ், காதர் நவாஸ் செரிப், அகமது அலி உமரி ஆகிய 6 பேர் மீது ஊபா (UAPA) சட்டம் பாய்ந்தது. சென்னையில் முதன்முறையாக இது போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்த அமைப்பின் கருத்தியலை பரப்புவதை முக்கியமாக செய்து வருவது தெரிய வந்தது. அமீர் உசேன் யூடியூப்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக, பொதுத் தேர்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிற காரணத்தினால், அதற்கு ஏற்றார்போல் பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்கக் கூடாது என பரப்புரை மேற்கொண்டு வந்ததாக தகவல் தெரிகிறது. மேலும், வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கூட்டங்கள் நடத்துவதும், குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பேரில், சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான்கான் தெருவில் Modern essential education trust என்ற அமைப்பை நடத்தி வந்ததாகவும், அங்கு அதிகளவு கூட்டங்களை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆட்கள் அதிகமாகிக் கொண்டே சென்று இருப்பதாகவும் கண்டுபிடித்தனர். மேலும், இந்த 6 பேர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

மேலும், இவர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்தும், இதற்கு நிதி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக யூடியூப் மூலமாக இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் என்.ஐ.ஏ விசாரணையில் இறங்கியது. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் இருந்து விவரங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டு பெற்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆறு பேர் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை மாநில உள்துறைக்கு காவல்துறை ஆணையர் மூலம் சென்னை காவல்துறை அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பிறகு தமிழக அரசு, இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பும் என தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை மாற்றம் செய்வது தொடர்பான முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'வீடியோ போடாதீங்க ப்ளீஸ்'.. ஆபாச ஆங்கரால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. யூடியூபர்ஸ் கைது..! - Veera Talks Anchor

சென்னை: சென்னையில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக சென்னை சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்தனர். குறிப்பாக, இவர்கள் பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஹிஜிபுதாகிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமியக் கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயற்சித்ததாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், பொறியாளர் அமீர் உசேன், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் மற்றும் முகமது மவுரிஸ், காதர் நவாஸ் செரிப், அகமது அலி உமரி ஆகிய 6 பேர் மீது ஊபா (UAPA) சட்டம் பாய்ந்தது. சென்னையில் முதன்முறையாக இது போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்த அமைப்பின் கருத்தியலை பரப்புவதை முக்கியமாக செய்து வருவது தெரிய வந்தது. அமீர் உசேன் யூடியூப்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக, பொதுத் தேர்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிற காரணத்தினால், அதற்கு ஏற்றார்போல் பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்கக் கூடாது என பரப்புரை மேற்கொண்டு வந்ததாக தகவல் தெரிகிறது. மேலும், வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கூட்டங்கள் நடத்துவதும், குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பேரில், சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான்கான் தெருவில் Modern essential education trust என்ற அமைப்பை நடத்தி வந்ததாகவும், அங்கு அதிகளவு கூட்டங்களை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆட்கள் அதிகமாகிக் கொண்டே சென்று இருப்பதாகவும் கண்டுபிடித்தனர். மேலும், இந்த 6 பேர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

மேலும், இவர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்தும், இதற்கு நிதி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக யூடியூப் மூலமாக இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் என்.ஐ.ஏ விசாரணையில் இறங்கியது. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் இருந்து விவரங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டு பெற்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆறு பேர் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை மாநில உள்துறைக்கு காவல்துறை ஆணையர் மூலம் சென்னை காவல்துறை அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பிறகு தமிழக அரசு, இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பும் என தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை மாற்றம் செய்வது தொடர்பான முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'வீடியோ போடாதீங்க ப்ளீஸ்'.. ஆபாச ஆங்கரால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. யூடியூபர்ஸ் கைது..! - Veera Talks Anchor

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.