ETV Bharat / state

நீலகிரியில் ஒரே நேரத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, கரடியால் பரபரப்பு! - LEOPARD AND BEAR in Coonoor

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 3:30 PM IST

Leopard and Bear movement: நீலகிரி குன்னூர் அருகே ஒரே நேரத்தில் ஊருக்குள் சிறுத்தை, கரடி வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுத்தை மற்றும் கரடியின் புகைப்படம்
சிறுத்தை மற்றும் கரடி (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், இங்குள்ள குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

ஊருக்குள் நுழைந்த சிறுத்தை மற்றும் கரடி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தற்போது வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது. இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்குவது அவ்வப்போது நடைபெறுகிறது.

மேலும். இரவில் மட்டும் வந்துகொண்டிருந்த வன விலங்குகள் தற்போது பகல் நேரங்களிலும் வெளியே வரத்தொடங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள கரிமொரா ஹைட்டி கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து அங்குள்ள குடிநீர்த் தொட்டியின் மேல் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தது.

குடிநீர்த் தொட்டிக்கு அருகில்தான் ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. இதனால் சிறுத்தையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கேமராவுடன் வந்த வனத்துறையினர், குடிநீர்த்தொட்டி மீது படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சிறுத்தையை கேமராவில் பதிவு செய்து உறுதி செய்தனர்.

இதன் பின்னர் சிறுத்தையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிறுத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து அடர் வனப்பகுதியை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில், கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்தது.

தொடர்ந்து சிறிது நேரம் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்ட கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. ஒரே நேரத்தில் சிறுத்தை மற்று கரடி என அடுத்தடுத்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்ததாக பொதுமக்கள் அச்சத்தில் செய்வதறியாது திகைத்தனர்.

மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமாக நடக்கும்" - திமுக நிர்வாகிக்கு வந்த கொலை மிரட்டல்!

நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், இங்குள்ள குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

ஊருக்குள் நுழைந்த சிறுத்தை மற்றும் கரடி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தற்போது வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது. இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்குவது அவ்வப்போது நடைபெறுகிறது.

மேலும். இரவில் மட்டும் வந்துகொண்டிருந்த வன விலங்குகள் தற்போது பகல் நேரங்களிலும் வெளியே வரத்தொடங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள கரிமொரா ஹைட்டி கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து அங்குள்ள குடிநீர்த் தொட்டியின் மேல் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தது.

குடிநீர்த் தொட்டிக்கு அருகில்தான் ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. இதனால் சிறுத்தையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கேமராவுடன் வந்த வனத்துறையினர், குடிநீர்த்தொட்டி மீது படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சிறுத்தையை கேமராவில் பதிவு செய்து உறுதி செய்தனர்.

இதன் பின்னர் சிறுத்தையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிறுத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து அடர் வனப்பகுதியை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில், கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்தது.

தொடர்ந்து சிறிது நேரம் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்ட கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. ஒரே நேரத்தில் சிறுத்தை மற்று கரடி என அடுத்தடுத்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்ததாக பொதுமக்கள் அச்சத்தில் செய்வதறியாது திகைத்தனர்.

மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமாக நடக்கும்" - திமுக நிர்வாகிக்கு வந்த கொலை மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.