ETV Bharat / state

போதைக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டி;மதுரை மாநகர காவல் துறை அறிவிப்பு! - drugs awareness competition

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 10:51 PM IST

Drugs Awareness Competition: போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை கொண்டிருக்கும் குறும்படங்களுக்கான போட்டியை மதுரை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள், கேமரா
போதைப்பொருள், கேமரா (Credits - ETV Bharat Tamil Nadu, ravi varman insta page)

மதுரை: மதுரை மாநகரில் கடந்த ஓராண்டு காலமாக போதைப் பொருட்களின் உபயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக, மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்பட போட்டி ஒன்றை தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "காவல்துறை விரைந்த நடவடிக்கை காரணமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான 606 குற்ற வழக்குகளில் 791 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 468.424 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்தும், கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 68 வாகனங்கள் (இருசக்கர வாகனங்கள் 50, மூன்று சக்கர வாகனங்கள் 11 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் -7) பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்ததற்காக 720 குற்ற வழக்குகளில் 764 குற்றவாளிகளை கைது செய்து 1953.121 கிலோகிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 19 வாகனங்கள் (இருசக்கர வாகனங்கள் 11, மூன்று சக்கர வாகனங்கள் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் -6) பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாநகரில் கடந்த ஓராண்டில் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகரத்திலுள்ள 11 காவல் நிலையங்களில் பதிவான 75 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1,634 கிலோகிராம் கஞ்சாவை மதுரை மண்டல அழித்தல் (Zonal Disposal Committee) குழு மூலம் இன்று (12.08.24) திருநெல்வேலி மாவட்டம் நாங்குவேரி தாலுகா பெத்தகுளம் கிராமத்தில் எரித்து அழிக்கப்பட்டன.

மதுரை மாநகரில் போதைப்பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களால் மதுரை மாநகருக்கு உட்பட்ட 156 உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளிலும், 32 கல்லூரிகளிலும் 205 போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள்
மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு 71,168 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மதுரை மாநகரில் உள்ன அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள் (Anti-Drug Club) துவங்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலமாக போதை பழக்கத்திற்கு ஆளான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆலோசனை வழங்கியும் அம்மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகள், முக்கிய தெருக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் அல்லது தன்னார்வலர்கள் 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை தயாரித்து, அதனை copmetn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக ஊடகப்பிரிவில் (Social Media Cell) நேரடியாக வருகின்ற 18.08.2024-ஆம் தேதி மாலை 05 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த முதல் மூன்று குறும்படங்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கவிருக்கிறார்" என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கஞ்சா விவகாரம்; தேனியில் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! - Savukku Shankar goondas Act

மதுரை: மதுரை மாநகரில் கடந்த ஓராண்டு காலமாக போதைப் பொருட்களின் உபயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக, மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்பட போட்டி ஒன்றை தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "காவல்துறை விரைந்த நடவடிக்கை காரணமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான 606 குற்ற வழக்குகளில் 791 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 468.424 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்தும், கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 68 வாகனங்கள் (இருசக்கர வாகனங்கள் 50, மூன்று சக்கர வாகனங்கள் 11 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் -7) பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்ததற்காக 720 குற்ற வழக்குகளில் 764 குற்றவாளிகளை கைது செய்து 1953.121 கிலோகிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 19 வாகனங்கள் (இருசக்கர வாகனங்கள் 11, மூன்று சக்கர வாகனங்கள் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் -6) பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாநகரில் கடந்த ஓராண்டில் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகரத்திலுள்ள 11 காவல் நிலையங்களில் பதிவான 75 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1,634 கிலோகிராம் கஞ்சாவை மதுரை மண்டல அழித்தல் (Zonal Disposal Committee) குழு மூலம் இன்று (12.08.24) திருநெல்வேலி மாவட்டம் நாங்குவேரி தாலுகா பெத்தகுளம் கிராமத்தில் எரித்து அழிக்கப்பட்டன.

மதுரை மாநகரில் போதைப்பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களால் மதுரை மாநகருக்கு உட்பட்ட 156 உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளிலும், 32 கல்லூரிகளிலும் 205 போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள்
மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு 71,168 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மதுரை மாநகரில் உள்ன அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள் (Anti-Drug Club) துவங்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலமாக போதை பழக்கத்திற்கு ஆளான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆலோசனை வழங்கியும் அம்மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகள், முக்கிய தெருக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் அல்லது தன்னார்வலர்கள் 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை தயாரித்து, அதனை copmetn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக ஊடகப்பிரிவில் (Social Media Cell) நேரடியாக வருகின்ற 18.08.2024-ஆம் தேதி மாலை 05 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த முதல் மூன்று குறும்படங்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கவிருக்கிறார்" என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கஞ்சா விவகாரம்; தேனியில் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! - Savukku Shankar goondas Act

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.