ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து! - BALAKRISHNA REDDY

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 12:01 PM IST

BALAKRISHNA REDDY CASE: பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - Balakrishna Reddy X Page)

சென்னை: கடந்த 1998ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தீர்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஜூன் 25ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சாட்சிகள் விசாரணை சரியாக நடைபெறவில்லை.

இவர்தான் கலவரத்தில் பேருந்தை சேதப்படுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அதனால், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: நீட் விலக்கு; தமிழக அரசின் தீர்மானத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் வரவேற்பு!

சென்னை: கடந்த 1998ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தீர்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஜூன் 25ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சாட்சிகள் விசாரணை சரியாக நடைபெறவில்லை.

இவர்தான் கலவரத்தில் பேருந்தை சேதப்படுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அதனால், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: நீட் விலக்கு; தமிழக அரசின் தீர்மானத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.