ETV Bharat / state

கரோனா ஊரடங்கில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க கூடாது - சென்னை ஐகோர்ட் உத்தரவு!

கரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு கரோனா தொற்று பரவிய காலத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின் 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 50 சதவீத பயணிகளுடனும், 2021 அக்டோபர் முதல் நூறு சதவீத பயணிகளுடனும் பேருந்துகள் இயங்க நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டாததால், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரையிலான காலாண்டுகளுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை என அறிக்கை அளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அந்த காலகட்டத்தில் சாலை வரி வசூலிக்க கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு.. மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

ஆனால், வாகனங்கள் 50 சதவீத பயணிகளுடனும், 100 சதவீத பயணிகளுடனும் இயக்க அனுமதித்துள்ளதாக கூறி, வாகன இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்த அறிக்கையை தமிழக அரசு நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கரோனா காலத்தில் பேருந்துகளை இயக்காததால், ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால், அந்த பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து அளித்த அறிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு கரோனா தொற்று பரவிய காலத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின் 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 50 சதவீத பயணிகளுடனும், 2021 அக்டோபர் முதல் நூறு சதவீத பயணிகளுடனும் பேருந்துகள் இயங்க நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டாததால், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரையிலான காலாண்டுகளுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை என அறிக்கை அளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அந்த காலகட்டத்தில் சாலை வரி வசூலிக்க கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு.. மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

ஆனால், வாகனங்கள் 50 சதவீத பயணிகளுடனும், 100 சதவீத பயணிகளுடனும் இயக்க அனுமதித்துள்ளதாக கூறி, வாகன இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்த அறிக்கையை தமிழக அரசு நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கரோனா காலத்தில் பேருந்துகளை இயக்காததால், ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால், அந்த பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து அளித்த அறிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.