ETV Bharat / state

12 வாரங்கள் கெடு.. ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தஞ்சை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி! - Thanjavur Collector encroachment

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 4:26 PM IST

Thanjavur Collector: கும்பகோணம் பொற்றாமறை குளத்தைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், பொற்றாமரை குளத்தைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில், பொற்றாமறை குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பக்தர்கள் பயன்படுத்த முடிவதில்லை என தெரிவித்தார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் 6 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும். அதன் அறிக்கையை 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாற்று இடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவிப்பது, அவர் ஆட்சியராக இருக்க தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது.

அது மட்டுமல்லாமல், அனைத்து ஆக்கிரமிப்புகளும் 12 வாரத்திற்குள் அகற்றப்பட்டது என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், அக்டோபர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: குடத்து தண்ணீரை குளத்தில் ஊற்றி ஆயி குளத்தை நிரப்பிட நூதன போராட்டம்!

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், பொற்றாமரை குளத்தைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில், பொற்றாமறை குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பக்தர்கள் பயன்படுத்த முடிவதில்லை என தெரிவித்தார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் 6 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும். அதன் அறிக்கையை 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாற்று இடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவிப்பது, அவர் ஆட்சியராக இருக்க தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது.

அது மட்டுமல்லாமல், அனைத்து ஆக்கிரமிப்புகளும் 12 வாரத்திற்குள் அகற்றப்பட்டது என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், அக்டோபர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: குடத்து தண்ணீரை குளத்தில் ஊற்றி ஆயி குளத்தை நிரப்பிட நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.