ETV Bharat / state

சவுக்கு சங்கர் குண்டர் சட்ட வழக்கு; உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகல்! - SAVUKKU SHANKAR Goondas Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 3:18 PM IST

Savukku Shankar case: யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு அறிவித்துள்ளது.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதுபோல உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், போதுமான காரணங்கள் இல்லாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் கொடுக்கப்பட்டதால் குண்டர் சட்டம் போடப்பட்டது. தனிப்பட்ட காரணங்கள் அரசுக்கு ஏதும் இல்லை. மேலும், அரசுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நீதிமன்றம் மற்றும் அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தனிப்பட்ட காரணங்களுக்காக திறப்பதாக வீடியோ வெளியிட்டு, அவர் தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டினார் என்ற காரணத்தினால் பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது? குண்டர் சட்டத்தை போட யார் பரிந்துரை செய்தது? குறிப்பிட்ட ஆதாரத்தின் அடிப்படையில் குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் அந்த ஆதாரத்தை அரசு சமர்பிக்க வேண்டும்.

ஒருவேளை காவல் ஆய்வாளர் தவறான தகவல்களுடன் பரிந்துரை செய்திருந்தால், குண்டர் சட்டம் போடுவதற்கு முன் உயரதிகாரிகள் தீர விசாரணை செய்ய மாட்டார்களா? குற்றமே நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பரிந்துரை செய்யப்பட்டதற்காக குண்டர் சட்டம் போட்டுவிடுவீர்களா? கோயம்பேட்டில் மக்கள் போராட்டம் நடத்தியதற்கு சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோ தான் காரணம் என எப்படி அரசு முடிவுக்கு வந்தது என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏற்கனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வழக்கின் விசாரணையில் இருந்து விலகுகிறோம். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்” என்று கூறி விலகினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பணமோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! - SAVUKKU SHANKAR KARUR CASE

சென்னை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதுபோல உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், போதுமான காரணங்கள் இல்லாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் கொடுக்கப்பட்டதால் குண்டர் சட்டம் போடப்பட்டது. தனிப்பட்ட காரணங்கள் அரசுக்கு ஏதும் இல்லை. மேலும், அரசுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நீதிமன்றம் மற்றும் அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தனிப்பட்ட காரணங்களுக்காக திறப்பதாக வீடியோ வெளியிட்டு, அவர் தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டினார் என்ற காரணத்தினால் பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது? குண்டர் சட்டத்தை போட யார் பரிந்துரை செய்தது? குறிப்பிட்ட ஆதாரத்தின் அடிப்படையில் குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் அந்த ஆதாரத்தை அரசு சமர்பிக்க வேண்டும்.

ஒருவேளை காவல் ஆய்வாளர் தவறான தகவல்களுடன் பரிந்துரை செய்திருந்தால், குண்டர் சட்டம் போடுவதற்கு முன் உயரதிகாரிகள் தீர விசாரணை செய்ய மாட்டார்களா? குற்றமே நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பரிந்துரை செய்யப்பட்டதற்காக குண்டர் சட்டம் போட்டுவிடுவீர்களா? கோயம்பேட்டில் மக்கள் போராட்டம் நடத்தியதற்கு சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோ தான் காரணம் என எப்படி அரசு முடிவுக்கு வந்தது என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏற்கனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வழக்கின் விசாரணையில் இருந்து விலகுகிறோம். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்” என்று கூறி விலகினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பணமோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! - SAVUKKU SHANKAR KARUR CASE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.