ETV Bharat / state

சவுக்கு சங்கரின் ஆட்கொணர்வு மனு.. ஜூலை 23-ல் விசாரணை! - Savukku Shankar case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 3:05 PM IST

Savukku Shankar Goondas case: சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கர், சென்னை உயர்நீதிமன்றம்
சவுக்கு சங்கர், சென்னை உயர்நீதிமன்றம் (PHOTO CREDITS - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெண் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர, காரில் கஞ்சா வைத்திருந்தது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார்.

அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், உத்தரவு நகலை இன்றைக்குள் தாக்கல் செய்வதாகக் கூறினார். மேலும், ஆட்கொணர்வு மனுவை ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கர்நாடகா நிலச்சரிவில் சிக்கி நாமக்கல் லாரி ஓட்டுநர் பலி.. தமிழக அரசுக்கு உறவினர்கள் வைத்த கோரிக்கை!

சென்னை: பெண் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர, காரில் கஞ்சா வைத்திருந்தது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார்.

அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், உத்தரவு நகலை இன்றைக்குள் தாக்கல் செய்வதாகக் கூறினார். மேலும், ஆட்கொணர்வு மனுவை ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கர்நாடகா நிலச்சரிவில் சிக்கி நாமக்கல் லாரி ஓட்டுநர் பலி.. தமிழக அரசுக்கு உறவினர்கள் வைத்த கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.