ETV Bharat / state

கரூரில் போலீஸ் விசாரணை தாமதமானதால் பெண் தற்கொலை; மூன்று பேர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 1:11 PM IST

Karur Woman Suicide case: பெண் ஒருவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூன்று பேர் கைது
காவல் நிலையத்தில் விசாரணை தாமதமானதால் பெண் தற்கொலை

கரூர்: பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடி காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் விரக்தியடைந்த கரூரை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கரூர் மாநகரில் அமைந்துள்ள குல்லா தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்லானி-பாத்திமா பீவி தம்பதியர். ஜெய்லானி டீ மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமா பீவி அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு குடும்பத்திற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க 33,000 ரூபாய்க்கு கடன் பெற ஜாமீன் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதங்களாக சரியாக தவணை கட்டி வந்த குடும்பம் திடீரென தவணையை கட்டாமல் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் கடன் வாங்கி கொடுத்த பாத்திமாபீவியை தங்களது நிறுவனத்திற்கு அழைத்து தகாத வார்த்தையால் திட்டியதாகவும், அதிக வட்டி வசூலித்ததாகவும் கரூர் நகர காவல் நிலையத்தில் கைப்பட புகார் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் புகாரை பெற்றுக் கொண்ட கரூர் நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாத்திமா பீவி கடந்த ஜனவரி 20ஆம் தேதி வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நள்ள முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் காவல்துறை அழுத்தம் கொடுத்ததன் பேரில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாத்திமா பீவி கடந்த ஜன.22 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இறப்பதற்கு முன்பு பாத்திமா பீவி பேசிய வீடியோவும், கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது.

இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் SDPI உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பைனான்ஸ் நிறுவனம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தகாத வார்த்தையிலும், மிரட்டல் தோணியில் பேசிய பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கூறி பாத்திமா பீவி உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து 2 வது நாளாக உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து கரூர் நகர போலீசார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (65), நாகராஜ் (32), கார்த்தி (22) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் அவர்களை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை கரூர் கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிதி நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அலட்சியப்படுத்தி நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் காலமானார்!

கரூர்: பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடி காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் விரக்தியடைந்த கரூரை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கரூர் மாநகரில் அமைந்துள்ள குல்லா தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்லானி-பாத்திமா பீவி தம்பதியர். ஜெய்லானி டீ மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமா பீவி அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு குடும்பத்திற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க 33,000 ரூபாய்க்கு கடன் பெற ஜாமீன் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதங்களாக சரியாக தவணை கட்டி வந்த குடும்பம் திடீரென தவணையை கட்டாமல் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் கடன் வாங்கி கொடுத்த பாத்திமாபீவியை தங்களது நிறுவனத்திற்கு அழைத்து தகாத வார்த்தையால் திட்டியதாகவும், அதிக வட்டி வசூலித்ததாகவும் கரூர் நகர காவல் நிலையத்தில் கைப்பட புகார் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் புகாரை பெற்றுக் கொண்ட கரூர் நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாத்திமா பீவி கடந்த ஜனவரி 20ஆம் தேதி வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நள்ள முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் காவல்துறை அழுத்தம் கொடுத்ததன் பேரில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாத்திமா பீவி கடந்த ஜன.22 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இறப்பதற்கு முன்பு பாத்திமா பீவி பேசிய வீடியோவும், கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது.

இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் SDPI உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பைனான்ஸ் நிறுவனம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தகாத வார்த்தையிலும், மிரட்டல் தோணியில் பேசிய பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கூறி பாத்திமா பீவி உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து 2 வது நாளாக உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து கரூர் நகர போலீசார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (65), நாகராஜ் (32), கார்த்தி (22) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் அவர்களை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை கரூர் கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிதி நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அலட்சியப்படுத்தி நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.