ETV Bharat / state

'அரசியலுக்காக அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்' - கரு.நாகராஜன் குற்றச்சாட்டு! - Agnipath scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 12:39 PM IST

Updated : Jul 11, 2024, 3:28 PM IST

Agnipath scheme: இளைஞர்கள் நிறைந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தை அரசியலுக்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு
கரு.நாகராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை நேற்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'நாடாளுன்றத்தில் ராகுல் காந்தி அக்னிபாத் தொடர்பாக பெரிய பொய்யை கூறியுள்ளார். அதற்கு ராஜ்நாத் சிங் பதிலடியும் கொடுத்துள்ளார். ராகுல் காந்தி மட்டும் அல்ல, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி என அனைவருக்கும் இந்த திட்டத்தை குறை சொல்வதுதான் நோக்கம்.

கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

ராணுவத்தை பகடையாகப் பயன்படுத்தி, அதன் வளர்ச்சிக்கு இடையூறாக நின்றது காங்கிரஸ் கட்சி. 1985ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஒரு நவீன போர் விமானம் கூட வாங்கவில்லை. இன்று ரஃபேல் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விமானப்படை, கடற்படை உலகின் 3வது இடத்தில் உள்ளது. மேலும், இன்று நாட்டு எல்லையில் 1,140 பாலங்கள் புதிதாக கட்டியுள்ளோம். மூன்று கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனைக்கு பிறகு 'அக்னிபாத் திட்டம்' (Agnipath Scheme) உருவாக்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சி வலிமை இல்லாத ராணுவமாக நமது ராணுவம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு தவறாக பேசிவருகிறது. பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தில் 4 வருடம் கழித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

இளைஞர்கள் நிறைந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை அரசியலுக்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார். இதைத்தொடர்ந்து காவல்துறையில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்ய வேண்டும். யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது' என்றார்.

இதைத் தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவின் தலைவர் ராமன் செய்தியாளரிடம் பேசுகையில், 'நாடாளுமன்றத்தில் அக்னிபாத் ராணுவ வீரருக்கு இழப்பீடு தொகை வழங்கியது தொடர்பாக ராகுல் காந்தியின் கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அது பொய் என்று ராகுல் காந்தி சொன்னார். ராணுவ வீரருக்கு கருணை நிதி, இன்சூரன்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணம் சிறிது தாமதம் ஏற்பட்டதை அவர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு! - Shobha Karandlanje case

சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை நேற்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'நாடாளுன்றத்தில் ராகுல் காந்தி அக்னிபாத் தொடர்பாக பெரிய பொய்யை கூறியுள்ளார். அதற்கு ராஜ்நாத் சிங் பதிலடியும் கொடுத்துள்ளார். ராகுல் காந்தி மட்டும் அல்ல, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி என அனைவருக்கும் இந்த திட்டத்தை குறை சொல்வதுதான் நோக்கம்.

கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

ராணுவத்தை பகடையாகப் பயன்படுத்தி, அதன் வளர்ச்சிக்கு இடையூறாக நின்றது காங்கிரஸ் கட்சி. 1985ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஒரு நவீன போர் விமானம் கூட வாங்கவில்லை. இன்று ரஃபேல் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விமானப்படை, கடற்படை உலகின் 3வது இடத்தில் உள்ளது. மேலும், இன்று நாட்டு எல்லையில் 1,140 பாலங்கள் புதிதாக கட்டியுள்ளோம். மூன்று கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனைக்கு பிறகு 'அக்னிபாத் திட்டம்' (Agnipath Scheme) உருவாக்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சி வலிமை இல்லாத ராணுவமாக நமது ராணுவம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு தவறாக பேசிவருகிறது. பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தில் 4 வருடம் கழித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

இளைஞர்கள் நிறைந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை அரசியலுக்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார். இதைத்தொடர்ந்து காவல்துறையில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்ய வேண்டும். யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது' என்றார்.

இதைத் தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவின் தலைவர் ராமன் செய்தியாளரிடம் பேசுகையில், 'நாடாளுமன்றத்தில் அக்னிபாத் ராணுவ வீரருக்கு இழப்பீடு தொகை வழங்கியது தொடர்பாக ராகுல் காந்தியின் கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அது பொய் என்று ராகுல் காந்தி சொன்னார். ராணுவ வீரருக்கு கருணை நிதி, இன்சூரன்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணம் சிறிது தாமதம் ஏற்பட்டதை அவர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு! - Shobha Karandlanje case

Last Updated : Jul 11, 2024, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.