ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாஜிஸ்திரேட்! - வெளியான புதிய தகவல் - Armstrong Murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 9:44 AM IST

TN BSP unit President Armstrong Murder case: சென்னை புழல் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடந்த இடத்தில் மாஜிஸ்திரேட் தீபா ஆய்வு செய்ததோடு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு
ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவரது வீட்டின் வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி என்கவுண்டர்: இதனிடையே, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் (33) என்ற முக்கிய குற்றவாளியை இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை மணலியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

ரெட்டேரி ஆட்டுச்சந்தை அருகே இயற்கை உபாதைக் கழிக்க சென்ற திருவேங்கடம் போலீசிடம் இருந்து தப்பிச் சென்று புழல் வெஜிடேரியன் விலேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்தார். அப்போது, காவல்துறையினர் அங்கு சென்றுப் பிடிக்க முற்பட்டபோது, காவல்துறையினரை நோக்கி கள்ளத்துப்பாக்கியால் சுட்டதால் பதிலுக்கு காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தனர்.

மாஜிஸ்திரேட் தீபா ஆய்வு: பின்னர், திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, புழல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மாஜிஸ்ட்ரேட் தீபா நேற்றிரவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு! - Armstrong Murder

அப்போது திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்த காவல் ஆய்வாளரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி வந்து கொட்டகையில் பதுங்கி இருந்தது, காவல்துறையினரை நோக்கி எவ்வாறு சுட முயன்றார், காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல், குற்றவாளிக்கு எங்கெங்கு குண்டு பாய்ந்தது, சம்பவம் நடைபெற்ற நேரம் என்ன, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தது எப்போது என்பன குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்பாக காவல் ஆய்வாளர் மற்றும் அப்போது உடனிருந்த காவல்துறையினரிடம் மாஜிஸ்திரேட் தீபா விசாரணை மேற்கொண்டார்.

நீதிபதியின் ஆய்வு, விசாரணை ஆகியவை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மற்றுமொரு முக்கியமான சிசிடிவி காட்சி வெளியானது! - Armstrong murder preparation

சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவரது வீட்டின் வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி என்கவுண்டர்: இதனிடையே, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் (33) என்ற முக்கிய குற்றவாளியை இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை மணலியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

ரெட்டேரி ஆட்டுச்சந்தை அருகே இயற்கை உபாதைக் கழிக்க சென்ற திருவேங்கடம் போலீசிடம் இருந்து தப்பிச் சென்று புழல் வெஜிடேரியன் விலேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்தார். அப்போது, காவல்துறையினர் அங்கு சென்றுப் பிடிக்க முற்பட்டபோது, காவல்துறையினரை நோக்கி கள்ளத்துப்பாக்கியால் சுட்டதால் பதிலுக்கு காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தனர்.

மாஜிஸ்திரேட் தீபா ஆய்வு: பின்னர், திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, புழல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மாஜிஸ்ட்ரேட் தீபா நேற்றிரவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு! - Armstrong Murder

அப்போது திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்த காவல் ஆய்வாளரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி வந்து கொட்டகையில் பதுங்கி இருந்தது, காவல்துறையினரை நோக்கி எவ்வாறு சுட முயன்றார், காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல், குற்றவாளிக்கு எங்கெங்கு குண்டு பாய்ந்தது, சம்பவம் நடைபெற்ற நேரம் என்ன, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தது எப்போது என்பன குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்பாக காவல் ஆய்வாளர் மற்றும் அப்போது உடனிருந்த காவல்துறையினரிடம் மாஜிஸ்திரேட் தீபா விசாரணை மேற்கொண்டார்.

நீதிபதியின் ஆய்வு, விசாரணை ஆகியவை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மற்றுமொரு முக்கியமான சிசிடிவி காட்சி வெளியானது! - Armstrong murder preparation

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.