ETV Bharat / state

அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. திருச்சிக்கு அடிச்சது ஜாக்பாட்..! - TN Govt Signed MoU With Jabil

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 12:34 PM IST

Government of Tamil Nadu signed MoU with Jabil: அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் (Credit - M.K.Stalin 'X' Page))

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27-ம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காச் சென்றார். இந்தப் பயணத்தில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதேபோல, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் AI தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதுமட்டும் அல்லாது, ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் (JABIL) நிறுவனம், தமிழ்நாட்டில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கும் செய்தியை, தனது அமெரிக்க பயணத்தின் 18ஆம் நாளான இன்று (செப்.10) அவர் வெளியிட்டார்.

இதையும் படிங்க: "எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்!

அதன்படி, திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ராக்வெல் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனம் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கவும், தமிழக சிறு குறு நிறுவனங்கள் மற்றும் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்குவதற்கும் ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27-ம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காச் சென்றார். இந்தப் பயணத்தில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதேபோல, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் AI தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதுமட்டும் அல்லாது, ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் (JABIL) நிறுவனம், தமிழ்நாட்டில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கும் செய்தியை, தனது அமெரிக்க பயணத்தின் 18ஆம் நாளான இன்று (செப்.10) அவர் வெளியிட்டார்.

இதையும் படிங்க: "எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்!

அதன்படி, திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ராக்வெல் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனம் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கவும், தமிழக சிறு குறு நிறுவனங்கள் மற்றும் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்குவதற்கும் ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.