ETV Bharat / state

2016 மோதல்; அமைச்சர் பெரியகருப்பன் மீதான குற்ற வழக்கிற்கு இடைக்கால தடை! - சென்னை உயர் நீதிமன்றம்

KR Periyakaruppan: அமைச்சர் பெரிய கருப்பன் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 7:18 AM IST

சென்னை: கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுக - அதிமுகவினரிடையே நடந்த மோதலில், பெரியகருப்பன் உள்பட எட்டு திமுகவினர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இல்லை என்றும், இவருக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிட்டார்.

இவ்வாறு வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு நான்கு வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக்குவதே குறிக்கோள்; கேலோ இந்தியா தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை: கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுக - அதிமுகவினரிடையே நடந்த மோதலில், பெரியகருப்பன் உள்பட எட்டு திமுகவினர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இல்லை என்றும், இவருக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிட்டார்.

இவ்வாறு வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு நான்கு வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக்குவதே குறிக்கோள்; கேலோ இந்தியா தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.