ETV Bharat / state

மிக்சர் ஜூஸரில் மறைத்து ரூ.1.83 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்! - Gold Seize in Trichy Airport

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 12:29 PM IST

Gold Seize in Trichy Airport: துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மிக்சர் ஜுஸரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1.83 கோடி ரூபாய் மதிப்பிலான 2,579 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தி வரப்பட்ட தங்கம்
கடத்தி வரப்பட்ட தங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடைமைக்குள் இருந்த புட் ப்ராசசர் (Food Processor) மற்றும் மிக்சர் ஜூஸர் (Mixer Juicer) சாதனத்தை சோதனை செய்த போது, அதில் 2 ஆயிரத்து 579 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 1.83 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகளவிலான தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை பறவைகள், பாம்புகள் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் ‘குருவி’ என்ற போர்வையில், தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆகவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; திருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர்கள் கைது! - Russians arrested in Tiruvannamalai

திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடைமைக்குள் இருந்த புட் ப்ராசசர் (Food Processor) மற்றும் மிக்சர் ஜூஸர் (Mixer Juicer) சாதனத்தை சோதனை செய்த போது, அதில் 2 ஆயிரத்து 579 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 1.83 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகளவிலான தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை பறவைகள், பாம்புகள் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் ‘குருவி’ என்ற போர்வையில், தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆகவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; திருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர்கள் கைது! - Russians arrested in Tiruvannamalai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.