ETV Bharat / state

சகோதரன் கொலைக்கு பழிக்குப்பழி; கட்சி பிரமுகரை கொடூரமாக கொலை செய்த கும்பல்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 1:53 PM IST

Ranipet Murder: ராணிப்பேட்டையில் மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேர் பழிக்குப்பழி வாங்கியதாக நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பழிக்குப்பழி வாங்கிய கும்பல் நீதிமன்றத்தில் சரண்
பழிக்குப்பழி வாங்கிய கும்பல் நீதிமன்றத்தில் சரண்

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேசம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக இருப்பவர் விவேகானந்தன்(38). இவர், நேற்றிரவு (பிப்.1) வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் விவேகானந்தனை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட விவேகானந்தனின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், விவேகானந்தனின் உறவினர்கள் மற்றும் மக்கள் தேசம் கட்சியினர் விவேகானந்தனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு!

இதனை தொடர்ந்து விவேகானந்தனை கொலை செய்த வழக்கில் பாமகவின் ராணிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு, சூர்யா ஆகிய 5 பேர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அப்போது, நீதிபதி ரவி சரணடைந்த 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, ராஜேஷ் என்பவரின் சகோதரரான இளவரசனை விவேகானந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்ததாகவும், அதற்கு பழி வாங்கும் எண்ணத்தில் விவேகானந்தனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

அதன் பின்னர், மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் விவேகானந்தனை பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தில் கொலை செய்து, நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், முன்பகை காரணமாக கட்சி பிரமுகரை, பிரதான நெடுஞ்சாலையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல ஞானவாபி மசூதி கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்!

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேசம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக இருப்பவர் விவேகானந்தன்(38). இவர், நேற்றிரவு (பிப்.1) வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் விவேகானந்தனை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட விவேகானந்தனின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், விவேகானந்தனின் உறவினர்கள் மற்றும் மக்கள் தேசம் கட்சியினர் விவேகானந்தனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு!

இதனை தொடர்ந்து விவேகானந்தனை கொலை செய்த வழக்கில் பாமகவின் ராணிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு, சூர்யா ஆகிய 5 பேர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அப்போது, நீதிபதி ரவி சரணடைந்த 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, ராஜேஷ் என்பவரின் சகோதரரான இளவரசனை விவேகானந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்ததாகவும், அதற்கு பழி வாங்கும் எண்ணத்தில் விவேகானந்தனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

அதன் பின்னர், மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் விவேகானந்தனை பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தில் கொலை செய்து, நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், முன்பகை காரணமாக கட்சி பிரமுகரை, பிரதான நெடுஞ்சாலையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல ஞானவாபி மசூதி கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.