ETV Bharat / state

"ஒருவேளை காங்கிரஸ் 99-யை விட அதிகமாக வென்றிருந்தால்?" - மோடி பேச்சுக்கு பதிலடி கொடுத்த திருநாவுக்கரசர்! - Former MP Thirunavukkarasar

Former MP Thirunavukkarasar: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் உள்ளிட்டவைகளை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக நாம் கூற முடியாது எனவும், காங்கிரஸ் 99-யை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் ராகுல்காந்தி பிரதமராகியிருப்பார் எனவும், மோடி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார் எனவும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 9:04 AM IST

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை, முன்னாள் எம்.பியும், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருநாவுக்கரசர் நேற்று திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை (BSP TN Unit President Murder) செய்யப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் உண்மை குற்றவாளிகள் தானா? என்பதை உறுதி செய்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கொலைச் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக நாம் கூற முடியாது.

கடமையை சரியாக செய்யும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும்: ஏனென்றால், எதிர்க்கட்சியினர் இதுபோல ஆளுங்கட்சியின் மீது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறுவது வழக்கம்தான், அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் திமுகவும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை தான் வைத்திருக்கும். தற்போது, காவல்துறையும், தமிழக அரசும் அவர்களது கடமையை சரியாக செய்து கொண்டு வருகின்றனர்.

மேலும், கள்ளச்சாராய சம்பவங்கள், அங்கும் இங்கும் நடக்கக்கூடிய படுகொலை சம்பவங்கள், வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கு காவல்துறை செயல்பட வேண்டும். காவல்துறையினர் மெத்தனமாக செயல்படக்கூடாது, அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார்: தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளுக்கு காங்கிரஸ் 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி பேசிய பேச்சுக்குப் பதில் அளித்த திருநாவுக்கரசர், 99 தொகுதியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார், மோடி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார் என்றார். முன்னதாக, மக்களவையில் (ஜூலை 2) பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியினர் 100-க்கு 99 பெறவில்லை. 543-க்கே 99-ல் தான் பெற்றுள்ளனர். 100-க்கு 99 இடங்களில் வெற்றி பெற்றதைப் போன்று பேசுகின்றனர் என்றார்.

ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்திருப்பார்: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை (NEET Exam) ரத்து செய்ய வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கின்றனர். ஆனால், பாஜக நீட் தேர்வை ரத்து செய்வது போன்று தெரியவில்லை. அதுமட்டுமின்றி, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் ராகுல்காந்தி நீட் தேர்வு ரத்து செய்து இருப்பார்.

3, 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சியினர் போராடி வருகிறோம். ஆனால், நீட் தேர்வு நடந்து கொண்டுதான் உள்ளது. மேலும், தனியார் நீட் பயிற்சி மையங்கள் தான் இதற்கான பயிற்சியையும் அளித்து வருகின்றன. இதேபோல, அரசுப் பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்களைத் துவங்கி, அதில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், 'அதிமுக சண்டைக்குள் நான் செல்ல விரும்பவில்லை எனக் கூறினார். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் கொடுத்ததை நான் வேணாம் என்று கூறவில்லை.

ஆனால், இனிவரும் காலங்களில் விபத்து சம்பவங்களுக்கு கொடுக்கும் நிவாரணத் தொகையைப் போல, அதில் எது அதிகபட்ச தொகையோ அந்த தொகையை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இதுபோன்ற சம்பவங்களிலும் வழங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது.

தற்போது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தமிழக அரசு சார்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏனெனில், அவர் சார்பில் தான் அமைச்சர்கள் சென்று பார்த்துள்ளனர். எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள் என்றால், எதிர்க்கட்சி அப்படித்தான் சொல்வார்கள்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அண்ணாமலை தான் பச்சோந்தி.. ஓபிஎஸ் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை".. எடப்பாடி பழனிசாமி விளாசல்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை, முன்னாள் எம்.பியும், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருநாவுக்கரசர் நேற்று திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை (BSP TN Unit President Murder) செய்யப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் உண்மை குற்றவாளிகள் தானா? என்பதை உறுதி செய்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கொலைச் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக நாம் கூற முடியாது.

கடமையை சரியாக செய்யும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும்: ஏனென்றால், எதிர்க்கட்சியினர் இதுபோல ஆளுங்கட்சியின் மீது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறுவது வழக்கம்தான், அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் திமுகவும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை தான் வைத்திருக்கும். தற்போது, காவல்துறையும், தமிழக அரசும் அவர்களது கடமையை சரியாக செய்து கொண்டு வருகின்றனர்.

மேலும், கள்ளச்சாராய சம்பவங்கள், அங்கும் இங்கும் நடக்கக்கூடிய படுகொலை சம்பவங்கள், வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கு காவல்துறை செயல்பட வேண்டும். காவல்துறையினர் மெத்தனமாக செயல்படக்கூடாது, அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார்: தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளுக்கு காங்கிரஸ் 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி பேசிய பேச்சுக்குப் பதில் அளித்த திருநாவுக்கரசர், 99 தொகுதியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார், மோடி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார் என்றார். முன்னதாக, மக்களவையில் (ஜூலை 2) பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியினர் 100-க்கு 99 பெறவில்லை. 543-க்கே 99-ல் தான் பெற்றுள்ளனர். 100-க்கு 99 இடங்களில் வெற்றி பெற்றதைப் போன்று பேசுகின்றனர் என்றார்.

ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்திருப்பார்: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை (NEET Exam) ரத்து செய்ய வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கின்றனர். ஆனால், பாஜக நீட் தேர்வை ரத்து செய்வது போன்று தெரியவில்லை. அதுமட்டுமின்றி, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் ராகுல்காந்தி நீட் தேர்வு ரத்து செய்து இருப்பார்.

3, 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சியினர் போராடி வருகிறோம். ஆனால், நீட் தேர்வு நடந்து கொண்டுதான் உள்ளது. மேலும், தனியார் நீட் பயிற்சி மையங்கள் தான் இதற்கான பயிற்சியையும் அளித்து வருகின்றன. இதேபோல, அரசுப் பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்களைத் துவங்கி, அதில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், 'அதிமுக சண்டைக்குள் நான் செல்ல விரும்பவில்லை எனக் கூறினார். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் கொடுத்ததை நான் வேணாம் என்று கூறவில்லை.

ஆனால், இனிவரும் காலங்களில் விபத்து சம்பவங்களுக்கு கொடுக்கும் நிவாரணத் தொகையைப் போல, அதில் எது அதிகபட்ச தொகையோ அந்த தொகையை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இதுபோன்ற சம்பவங்களிலும் வழங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது.

தற்போது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தமிழக அரசு சார்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏனெனில், அவர் சார்பில் தான் அமைச்சர்கள் சென்று பார்த்துள்ளனர். எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள் என்றால், எதிர்க்கட்சி அப்படித்தான் சொல்வார்கள்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அண்ணாமலை தான் பச்சோந்தி.. ஓபிஎஸ் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை".. எடப்பாடி பழனிசாமி விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.