ETV Bharat / state

ஜாபர் சாதிக் வழக்கு: குற்றப்பத்திரிக்கையில் 12 வது நபராக சேர்க்கப்பட்ட இயக்குநர் அமீர்! - Jaffer Sadiq ED case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 21 hours ago

Jaffer Sadiq ED case: ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம், ஜாபர் சாதிக் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம், ஜாபர் சாதிக் -கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிகின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை திருப்தியாக இல்லை" - பகுஜன் சமாஜ் கட்சியினர் பகிரங்க குற்றச்சாட்டு!

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் குற்றப்பத்திரிக்கையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில், 12 வது நபராக சேர்க்கப்பட்டுள்ள இயக்குநர் அமீர், சட்டவிரோதமான பணத்தை கையாண்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிகின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை திருப்தியாக இல்லை" - பகுஜன் சமாஜ் கட்சியினர் பகிரங்க குற்றச்சாட்டு!

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் குற்றப்பத்திரிக்கையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில், 12 வது நபராக சேர்க்கப்பட்டுள்ள இயக்குநர் அமீர், சட்டவிரோதமான பணத்தை கையாண்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.