ETV Bharat / state

தாய் யானையால் நிராகரிப்பு.. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த குட்டி யானை! - Coimbatore Baby Elephant

Coimbatore Baby Elephant: கோயம்புத்தூரில் தாயால் நிராகரிக்கப்பட்ட குட்டி யானை, நீலகிரி மாவட்டம் முதுமலை தேசிய பூங்காவில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்து வரப்பட்டது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 12:01 PM IST

தெப்பக்காடு முகாமில் குட்டி யானை
தெப்பக்காடு முகாமில் குட்டி யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30ஆம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் தரையில் படுத்து கிடந்த 40 வயது பெண் யானைக்கு, ஐந்து நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அப்போது, அந்த பெண் யானையுடன் இருந்த மூன்று மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1ஆம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை, கடந்த ஜூன் 3ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

தெப்பக்காடு முகாமில் குட்டி யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கடந்த ஜூன் 4ஆம் தேதி கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையைச் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், தாய் யானை குட்டியை ஏற்காத நிலையில், மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர்.

இந்நிலையில், மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் சனிக்கிழமை காலை முதல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் தலைமை வன உயிரினக் காப்பாளரின் ஆணைப்படி, அந்த 4 மாத குட்டி யானையை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நேற்று கொண்டு வந்தனர்.

அங்கு உணவளிக்கும் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட யானைக்கு பால் வழங்கப்பட்டது. மேலும், யானைகள் முகாமில் குட்டி யானை பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சுருளி அருவியில் தஞ்சமடைந்த யானை.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

நீலகிரி: கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30ஆம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் தரையில் படுத்து கிடந்த 40 வயது பெண் யானைக்கு, ஐந்து நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அப்போது, அந்த பெண் யானையுடன் இருந்த மூன்று மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1ஆம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை, கடந்த ஜூன் 3ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

தெப்பக்காடு முகாமில் குட்டி யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கடந்த ஜூன் 4ஆம் தேதி கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையைச் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், தாய் யானை குட்டியை ஏற்காத நிலையில், மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர்.

இந்நிலையில், மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் சனிக்கிழமை காலை முதல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் தலைமை வன உயிரினக் காப்பாளரின் ஆணைப்படி, அந்த 4 மாத குட்டி யானையை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நேற்று கொண்டு வந்தனர்.

அங்கு உணவளிக்கும் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட யானைக்கு பால் வழங்கப்பட்டது. மேலும், யானைகள் முகாமில் குட்டி யானை பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சுருளி அருவியில் தஞ்சமடைந்த யானை.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.