ETV Bharat / state

"பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது" - சிபிஐ டி.ராஜா விமர்சணம்! - CPI General Secretary D Raja

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 9:46 PM IST

D Raja: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் பல்வேறு பகுதிகளில் நடந்த தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளதாகவும், பாஜகவின் வீழ்ச்சி காலம் தொடங்கி விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.

சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா
சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீரப்பு பாஜகவிற்கு எதிரான தீர்ப்பாக கருதுகிறோம். பாஜகவிற்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியைக் கொடுத்து இருக்கிறார்கள். பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறவில்லை. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்றோர் ஆதரவு காரணமாக கூட்டு ஆட்சி அமைந்து இருக்கிறது.

பிரதமர் மோடி தேர்தலின் போதும், தேர்தலுக்கு முன்னரும் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று வீராப்பு பேசினார். அதற்கு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றப் போவதாக கூறினார். ஆனால், உலகில் மிக மோசமான நிலையில் நமது பொருளாதாரம் உள்ளது.

திடீரென மூன்று சட்டங்களை செயல்படுத்துவது கண்டனத்துக்குரியது. இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதமே ஜனநாயகத்திற்கு விரோதமானது, அரசியல் சட்ட நெறிகளுக்கு புறம்பானது. இந்த சட்டங்களை கைவிடுவதோடு, நிறுத்தி வைக்க வேண்டும். அதற்காக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தலில் 400 இடங்களைப் பெற்று விட்டால் அரசியல் சட்டம் மாற்றப்படும், சமூக நீதி, இட ஒதுக்கீடு கைவிடப்படும் என்று அச்சத்தை உருவாக்கி விட்டார்கள். மக்கள் நிலைமையை உணர்ந்து பாஜகவிற்கு பெரிய அடியைக் கொடுத்தார்கள். மக்கள் அளித்த தீர்ப்பு பாஜகவிற்கு, மோடிக்கு எதிரானது. இதை பாஜக ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ அது தான் உண்மை.

இது பாஜக ஆட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கப் போகிறது. பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மதவெறி அரசியலை முன்வைத்து மக்களை பிளவுபடுத்தி வெறுப்பு அரசியலை நடத்தி வரும் பாஜக வீழ்ச்சி அடைய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்" என பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், மின்கட்டண உயர்வு, மத்திய அரசின் குற்றவியல் சட்டம் உள்ளிட்டவை குறித்து இங்கு நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்கள் பாதிக்கப்படுவதால் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 29ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

குற்றவியல் சட்டத்தைக் கண்டித்தும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “தேர்தல் நேரத்தில் மட்டுமே காங்கிரஸை சேர்த்துக் கொள்கிறார்கள்..” - கார்த்தி சிதம்பரம் பளீச்!

ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீரப்பு பாஜகவிற்கு எதிரான தீர்ப்பாக கருதுகிறோம். பாஜகவிற்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியைக் கொடுத்து இருக்கிறார்கள். பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறவில்லை. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்றோர் ஆதரவு காரணமாக கூட்டு ஆட்சி அமைந்து இருக்கிறது.

பிரதமர் மோடி தேர்தலின் போதும், தேர்தலுக்கு முன்னரும் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று வீராப்பு பேசினார். அதற்கு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றப் போவதாக கூறினார். ஆனால், உலகில் மிக மோசமான நிலையில் நமது பொருளாதாரம் உள்ளது.

திடீரென மூன்று சட்டங்களை செயல்படுத்துவது கண்டனத்துக்குரியது. இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதமே ஜனநாயகத்திற்கு விரோதமானது, அரசியல் சட்ட நெறிகளுக்கு புறம்பானது. இந்த சட்டங்களை கைவிடுவதோடு, நிறுத்தி வைக்க வேண்டும். அதற்காக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தலில் 400 இடங்களைப் பெற்று விட்டால் அரசியல் சட்டம் மாற்றப்படும், சமூக நீதி, இட ஒதுக்கீடு கைவிடப்படும் என்று அச்சத்தை உருவாக்கி விட்டார்கள். மக்கள் நிலைமையை உணர்ந்து பாஜகவிற்கு பெரிய அடியைக் கொடுத்தார்கள். மக்கள் அளித்த தீர்ப்பு பாஜகவிற்கு, மோடிக்கு எதிரானது. இதை பாஜக ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ அது தான் உண்மை.

இது பாஜக ஆட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கப் போகிறது. பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மதவெறி அரசியலை முன்வைத்து மக்களை பிளவுபடுத்தி வெறுப்பு அரசியலை நடத்தி வரும் பாஜக வீழ்ச்சி அடைய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்" என பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், மின்கட்டண உயர்வு, மத்திய அரசின் குற்றவியல் சட்டம் உள்ளிட்டவை குறித்து இங்கு நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்கள் பாதிக்கப்படுவதால் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 29ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

குற்றவியல் சட்டத்தைக் கண்டித்தும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “தேர்தல் நேரத்தில் மட்டுமே காங்கிரஸை சேர்த்துக் கொள்கிறார்கள்..” - கார்த்தி சிதம்பரம் பளீச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.