ETV Bharat / state

தூத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கு ஆக.20 வரை நீதிமன்ற காவல்: இலங்கை நீதிமன்ற உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி! - thoothukudi fishermen arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 10:54 AM IST

judicial custody for thoothukudi fishermen: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 போரையும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை கல்பட்டி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தூத்துக்குடி மீனவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தூத்துக்குடி மீனவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி ஒரு படகிலும், 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் அழைத்து பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 5 ஆம் தேதி அன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் நேற்று (ஆகஸ்ட் 6) புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் கல்பிட்டி மீன் வளத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இவோனா விமலரத்னா, மீனவர்கள் 22 பேரையும் வரும் 20ம் தேதி வரை வாரியபொல சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 22 பேரும் நேற்று வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று தருவைகுளம் கிராம மக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியை சந்தித்து மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு விரைந்து மீனவர்களையும் படகையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும், தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர்களை விடுவிக்க கோரி மனுக்களை அளித்தனர். ஆனால். இலங்கை அரசு மீனவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி ஒரு படகிலும், 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் அழைத்து பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 5 ஆம் தேதி அன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் நேற்று (ஆகஸ்ட் 6) புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் கல்பிட்டி மீன் வளத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இவோனா விமலரத்னா, மீனவர்கள் 22 பேரையும் வரும் 20ம் தேதி வரை வாரியபொல சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 22 பேரும் நேற்று வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று தருவைகுளம் கிராம மக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியை சந்தித்து மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு விரைந்து மீனவர்களையும் படகையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும், தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர்களை விடுவிக்க கோரி மனுக்களை அளித்தனர். ஆனால். இலங்கை அரசு மீனவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.