ETV Bharat / sports

அவ்வளவு மோசமானவரா ஹர்திக் பாண்டியா? நடாஷாவுடனான விவகாரத்தின் அதிரும் பின்னணி! - Hardik and Natasha

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 4:59 PM IST

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா - நடாஷா விவகாரத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Hardik Pandya - Natasha (ANI and IANS Photo)

டெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சும் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். இதை ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்தார். தற்போது இருவரும் விவாகரத்து செய்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இருவரும் வெவ்வேறு காரணங்கள் காரணமாக விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா மிகவும் பெருமை குணம் கொண்டவராகவும், திமிர் பிடித்தவராக காணப்பட்டதாகவும் நடாஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹர்திக் பாண்டியாவின் குணாதிசியங்களை நடாஷாவால் தாங்க முடியவில்லை.

ஹர்திக் பாண்டியாவை மாற்ற நடாஷா முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து மேலும் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவை மாற்ற முயற்சித்து தோல்வி கண்ட நிலையில் அவரது குணாதிசயங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால், உறவைத் தொடர்வது கடினம் என்று நடாஷா உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர், நடாஷா இருவரும் விவகாரத்து பெறுவதே சிறந்தது என்று எண்ணியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நடாஷாவுக்கு கடினமாக இருந்தாலும், அவருக்கும் அவரது மகன் அகஸ்தியாவுக்கும் இது அவசியம் என்று நடாஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விவகாரத்துக்கு பின்னர் நடாஷா தனது மகனுடன் செர்பியாவுக்குத் திரும்பினார். டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வில் உள்ளார். உலகக் கோப்பைக்குப் பிறகு, இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் விளையாடினார். தற்போது கிரீஸ் நாட்டில் தனது ஓய்வை கொண்டாடி வரும் பாண்டியா பிரபல பாப் பாடகி வாலியாவுடன் நெருங்கிய உறவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரம்! - Pakistan vs Bangladesh First Test

டெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சும் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். இதை ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்தார். தற்போது இருவரும் விவாகரத்து செய்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இருவரும் வெவ்வேறு காரணங்கள் காரணமாக விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா மிகவும் பெருமை குணம் கொண்டவராகவும், திமிர் பிடித்தவராக காணப்பட்டதாகவும் நடாஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹர்திக் பாண்டியாவின் குணாதிசியங்களை நடாஷாவால் தாங்க முடியவில்லை.

ஹர்திக் பாண்டியாவை மாற்ற நடாஷா முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து மேலும் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவை மாற்ற முயற்சித்து தோல்வி கண்ட நிலையில் அவரது குணாதிசயங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால், உறவைத் தொடர்வது கடினம் என்று நடாஷா உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர், நடாஷா இருவரும் விவகாரத்து பெறுவதே சிறந்தது என்று எண்ணியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நடாஷாவுக்கு கடினமாக இருந்தாலும், அவருக்கும் அவரது மகன் அகஸ்தியாவுக்கும் இது அவசியம் என்று நடாஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விவகாரத்துக்கு பின்னர் நடாஷா தனது மகனுடன் செர்பியாவுக்குத் திரும்பினார். டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வில் உள்ளார். உலகக் கோப்பைக்குப் பிறகு, இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் விளையாடினார். தற்போது கிரீஸ் நாட்டில் தனது ஓய்வை கொண்டாடி வரும் பாண்டியா பிரபல பாப் பாடகி வாலியாவுடன் நெருங்கிய உறவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரம்! - Pakistan vs Bangladesh First Test

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.