ETV Bharat / sports

கில், சாய் சுதர்சன் சதம்.. சென்னை அணிக்கு இமாலய இலக்கு! - gujarat vs chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 9:39 PM IST

CSK vs GT: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.

GT VS CSK IPL MATCH
GT VS CSK IPL MATCH (Credit: ANI)

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டம் இன்று (மே 10) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 4வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக இன்று சுப்மன் கில்லுடன், சாய் சுதர்சன் களம் இறங்கினார். பலமாக கருதப்பட்ட இந்த கூட்டணி அதை நிருபிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது.

ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் அடித்து சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். அணியின் பலம் வாய்ந்த பந்து வீச்சாளராக கருதப்படும் துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோராலேயே இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியவில்லை. பார்ட்னர்ஷிப், முதலில் 100 ஆனது, பிறகு 150, 200 என எகிறியது.

இருவரும் தங்களது சதத்தை எட்டினர். சாய் சுதர்சனுக்கு இது முதலாவது சதம். அதே சமயம் கில்லுக்கு 4வது சதம். பின்னர் ஒரு வழியாக இந்த கூட்டணி 18வது ஓவரில் பிரிந்தது. முதலில் சாய் சுதர்சன், ஷிபம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் ஜடேஜாவிடம், சுப்மன் கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் எடுத்திருந்தனர்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பாக தேஷ்பாண்டே மட்டும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: மாலத்தீவில் இருந்து முற்றிலும் வெளியேறிய இந்திய ராணுவம்... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - Indian Soldier Return From Maldives

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டம் இன்று (மே 10) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 4வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக இன்று சுப்மன் கில்லுடன், சாய் சுதர்சன் களம் இறங்கினார். பலமாக கருதப்பட்ட இந்த கூட்டணி அதை நிருபிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது.

ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் அடித்து சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். அணியின் பலம் வாய்ந்த பந்து வீச்சாளராக கருதப்படும் துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோராலேயே இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியவில்லை. பார்ட்னர்ஷிப், முதலில் 100 ஆனது, பிறகு 150, 200 என எகிறியது.

இருவரும் தங்களது சதத்தை எட்டினர். சாய் சுதர்சனுக்கு இது முதலாவது சதம். அதே சமயம் கில்லுக்கு 4வது சதம். பின்னர் ஒரு வழியாக இந்த கூட்டணி 18வது ஓவரில் பிரிந்தது. முதலில் சாய் சுதர்சன், ஷிபம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் ஜடேஜாவிடம், சுப்மன் கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் எடுத்திருந்தனர்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பாக தேஷ்பாண்டே மட்டும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: மாலத்தீவில் இருந்து முற்றிலும் வெளியேறிய இந்திய ராணுவம்... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - Indian Soldier Return From Maldives

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.