ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட்டின் 'யார்க்கர் கிங்' நடராஜன் நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்! ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி - T Natarajan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 1:50 PM IST

natarajan swamy dharisanam: இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

நடராஜன் நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்
நடராஜன் நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: டிஎன்பில் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், கடந்த 5 ஆம் தேதி சேலம் அடுத்துள்ள வாழப்பாடியில் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2வது கட்ட லீக் போட்டிகள் கோவையில் நடைபெற்று முடிந்த நிலையில், தொடரின் 3வது கட்ட லீக் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகின்றன.

நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் நடராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்காக சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 8 அணிகளின் வீரர்கள் திருநெல்வேலிக்கு வருகை புரிந்து விளையாடி வருகின்றனர். மேலும் போட்டிகள் இல்லாத நேரங்களில் நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவி, நெல்லையப்பர் கோயில், முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட இடங்களை சக வீரர்களுடன் இணைந்து சுற்றிப்பார்ப்பதுடன், இருட்டுக்கடை அல்வாவையும் அவர்கள் ருசித்து வருகின்றனர்.

நெல்லையப்பர் கோயிலில் நடராஜன்: இந்த நிலையில், 'யார்க்கர் கிங்' என்றழைக்கப்படும் சேலத்தைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளின் நாயகனாக திகழ்ந்துவரும் வேகபந்துவீச்சாளர் நடராஜன், நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

முதலில் கோயிலுக்கு சென்ற அவர், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து தாமரை சபை நடராஜமூர்த்தி மற்றும் தாமரை சபா மண்டபத்தை பார்வையிட்டு தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் நெல்லையப்பர் கோவில் இசை தூண்கள் கோவில் சிற்பங்களையும் பார்வையிட்டு அதுகுறித்து கேட்டறிந்தார். கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த நடராஜனுடன், பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடிவரும் நடராஜன், இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அல்வாவை ருசித்த அஸ்வின்: முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லையப்பர் கோயில் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடைக்கு வருகை தந்து அல்வாவை ருசி பார்த்தார். பின்னர் "திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா மட்டும் எப்படி இவ்வாறு ருசியாக இருக்கிறது?" என கடையின் உரிமையாளரிடம் கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆஹா என்ன ருசி.. நெல்லை இருட்டுக் கடை அல்வாவை ருசித்த அஸ்வின்!

திருநெல்வேலி: டிஎன்பில் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், கடந்த 5 ஆம் தேதி சேலம் அடுத்துள்ள வாழப்பாடியில் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2வது கட்ட லீக் போட்டிகள் கோவையில் நடைபெற்று முடிந்த நிலையில், தொடரின் 3வது கட்ட லீக் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகின்றன.

நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் நடராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்காக சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 8 அணிகளின் வீரர்கள் திருநெல்வேலிக்கு வருகை புரிந்து விளையாடி வருகின்றனர். மேலும் போட்டிகள் இல்லாத நேரங்களில் நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவி, நெல்லையப்பர் கோயில், முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட இடங்களை சக வீரர்களுடன் இணைந்து சுற்றிப்பார்ப்பதுடன், இருட்டுக்கடை அல்வாவையும் அவர்கள் ருசித்து வருகின்றனர்.

நெல்லையப்பர் கோயிலில் நடராஜன்: இந்த நிலையில், 'யார்க்கர் கிங்' என்றழைக்கப்படும் சேலத்தைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளின் நாயகனாக திகழ்ந்துவரும் வேகபந்துவீச்சாளர் நடராஜன், நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

முதலில் கோயிலுக்கு சென்ற அவர், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து தாமரை சபை நடராஜமூர்த்தி மற்றும் தாமரை சபா மண்டபத்தை பார்வையிட்டு தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் நெல்லையப்பர் கோவில் இசை தூண்கள் கோவில் சிற்பங்களையும் பார்வையிட்டு அதுகுறித்து கேட்டறிந்தார். கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த நடராஜனுடன், பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடிவரும் நடராஜன், இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அல்வாவை ருசித்த அஸ்வின்: முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லையப்பர் கோயில் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடைக்கு வருகை தந்து அல்வாவை ருசி பார்த்தார். பின்னர் "திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா மட்டும் எப்படி இவ்வாறு ருசியாக இருக்கிறது?" என கடையின் உரிமையாளரிடம் கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆஹா என்ன ருசி.. நெல்லை இருட்டுக் கடை அல்வாவை ருசித்த அஸ்வின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.