ETV Bharat / sports

"அரசியல் அழுத்தம்.. இப்போது ஓய்வு இல்லை"- மனம் திறந்த வினேஷ் போகத்! - Vinesh Phogat Gold Medal

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 28, 2024, 1:01 PM IST

அரசியலில் சேர அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Vinesh Phogat (IANS Photo)

ஜிந்த்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் நடைபெற்ற விழாவில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் சேரச் சொல்லி தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கலந்து பேசி ஆலோசனை பெற்ற பின்னரே முடிவு எடுப்பேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்தார்.

அப்போது அரசியல் அல்லது விளையாட்டு இரண்டில் எது உங்களது தேர்வாக இருக்கும் எனறு எழுப்பப்பட்ட கேள்விக்கு, இரண்டையும் ஒரே நேரத்தில் தொடர்வேன் என்றும் வினேஷ் போகத் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தான் ஜிந்த் நகரத்தின் மருமகள் என்றும் அரியானாவின் அரண் ஜிந்த் நகரம் என்றும் கூறினார்.

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக காணப்படுகிறது என்றும், \ விவசாயிகளின் அவலநிலை மற்றும் அரசின் அறியாமையை நினைத்து தான் வருத்தம் கொண்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும், விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றதாகவும், தான் கஷ்டத்தில் இருந்த போதெல்லாம் விவசாயிகள் தனக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் வினேஷ் போகத் கூறினார்.

மல்யுத்தத்தில் இருந்து எப்போது ஓய்வு என்ற கேள்விக்கு பதிலளித்த வினேஷ் போகத், தனது மனது எப்போது தெளிவாக இருக்கிறதோ அப்போது அடுத்த திட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் அண்மையில் தனக்கு நேர்ந்ததில் இருந்து தான் இன்னும் வெளியே வரவில்லை என்றும் வினேஷ் போக்த் தெரிவித்தார்.

மல்யுத்த சம்மேளன் தலைவர் சஞ்செய் சிங், வினேஷ் போகத் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, யார் அந்த சஞ்செய் சிங், அவரைப் பற்றி தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் சர்ச்சைக்குரியவற்றை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் வினேஷ் போகத் காட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக காப்ஸ் விவசாயிகள் அமைப்பினர் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை தவறிவிட்ட வினேஷ் போகத்துக்கு தங்க பதக்கம் பரிசாக அளிக்கப்பட்டது. பாரீஸ் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்த காரணத்திற்காக பதக்கத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பையை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது அகமதாபாத்! - Ultimate Table Tennis 2024

ஜிந்த்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் நடைபெற்ற விழாவில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் சேரச் சொல்லி தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கலந்து பேசி ஆலோசனை பெற்ற பின்னரே முடிவு எடுப்பேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்தார்.

அப்போது அரசியல் அல்லது விளையாட்டு இரண்டில் எது உங்களது தேர்வாக இருக்கும் எனறு எழுப்பப்பட்ட கேள்விக்கு, இரண்டையும் ஒரே நேரத்தில் தொடர்வேன் என்றும் வினேஷ் போகத் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தான் ஜிந்த் நகரத்தின் மருமகள் என்றும் அரியானாவின் அரண் ஜிந்த் நகரம் என்றும் கூறினார்.

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக காணப்படுகிறது என்றும், \ விவசாயிகளின் அவலநிலை மற்றும் அரசின் அறியாமையை நினைத்து தான் வருத்தம் கொண்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும், விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றதாகவும், தான் கஷ்டத்தில் இருந்த போதெல்லாம் விவசாயிகள் தனக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் வினேஷ் போகத் கூறினார்.

மல்யுத்தத்தில் இருந்து எப்போது ஓய்வு என்ற கேள்விக்கு பதிலளித்த வினேஷ் போகத், தனது மனது எப்போது தெளிவாக இருக்கிறதோ அப்போது அடுத்த திட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் அண்மையில் தனக்கு நேர்ந்ததில் இருந்து தான் இன்னும் வெளியே வரவில்லை என்றும் வினேஷ் போக்த் தெரிவித்தார்.

மல்யுத்த சம்மேளன் தலைவர் சஞ்செய் சிங், வினேஷ் போகத் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, யார் அந்த சஞ்செய் சிங், அவரைப் பற்றி தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் சர்ச்சைக்குரியவற்றை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் வினேஷ் போகத் காட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக காப்ஸ் விவசாயிகள் அமைப்பினர் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை தவறிவிட்ட வினேஷ் போகத்துக்கு தங்க பதக்கம் பரிசாக அளிக்கப்பட்டது. பாரீஸ் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்த காரணத்திற்காக பதக்கத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பையை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது அகமதாபாத்! - Ultimate Table Tennis 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.