ETV Bharat / international

ஓமன் மசூதி துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொலை! மற்றொரு இந்தியர் படுகாயம்! என்ன நடந்தது? - Oman Mosque Shooting indian killed

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 12:33 PM IST

ஓமன் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Representational Image (ETV Bharat)

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மசூதியில் கடந்த ஜூலை 15ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் மஸ்கட் அடுத்துள்ள வதி கபீர் பகுதியில் இயங்கி வந்த மசூதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவர் இந்தியர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர் குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு போலீசார் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பக்கிச் சூடு சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனத் தெரியவராத நிலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழு இந்த தாக்குதலுக்க் பொறுப்பேற்றுக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த மசூதி ஷியா மக்களுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டிய போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஓமனில் இது போன்ற துப்பாக்கிச் சம்பவங்கள் நிகழ்வது அரிதானது எனக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ராயல் ஓமன் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஓமனில் சரக்கு கப்பல் கவிழ்ந்து 13 இந்தியர்கள் மாயம்! மீட்பு பணியில் கடற்படை! - Oman Ship Sink 13 indians missing

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மசூதியில் கடந்த ஜூலை 15ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் மஸ்கட் அடுத்துள்ள வதி கபீர் பகுதியில் இயங்கி வந்த மசூதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவர் இந்தியர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர் குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு போலீசார் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பக்கிச் சூடு சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனத் தெரியவராத நிலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழு இந்த தாக்குதலுக்க் பொறுப்பேற்றுக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த மசூதி ஷியா மக்களுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டிய போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஓமனில் இது போன்ற துப்பாக்கிச் சம்பவங்கள் நிகழ்வது அரிதானது எனக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ராயல் ஓமன் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஓமனில் சரக்கு கப்பல் கவிழ்ந்து 13 இந்தியர்கள் மாயம்! மீட்பு பணியில் கடற்படை! - Oman Ship Sink 13 indians missing

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.