ETV Bharat / entertainment

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - ஆளுநர் வேண்டுதல்.. முதலமைச்சர் வாழ்த்து! - Rajinikanth Hospitalized

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 19 minutes ago

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் (Credits - ANI)

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சிகிச்சைக்கு அனுமதி எனவும், இதற்காக இன்று முக்கிய பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், இதயம் தொடர்பான பிரச்னை காரணமாக, இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்கப்பட்டு, இன்று (அக்.1) காலை அவருக்கு முக்கிய மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுவரை ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் இருந்தும், அவரது குடும்பத்தினரிடம் இருந்தும் எந்தவொரு விளக்கமும் வரவில்லை. எனவே, இன்று காலை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்" எனக் கூறியதாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சிகிச்சைக்கு அனுமதி எனவும், இதற்காக இன்று முக்கிய பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், இதயம் தொடர்பான பிரச்னை காரணமாக, இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்கப்பட்டு, இன்று (அக்.1) காலை அவருக்கு முக்கிய மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுவரை ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் இருந்தும், அவரது குடும்பத்தினரிடம் இருந்தும் எந்தவொரு விளக்கமும் வரவில்லை. எனவே, இன்று காலை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்" எனக் கூறியதாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Last Updated : 19 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.