ETV Bharat / entertainment

ஆந்திரா, தெலங்கானா மழை வெள்ள பாதிப்பு: 1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஜூனியர் என்டிஆர்! - Junior NTR donation to Flood relief

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 7:14 PM IST

Junior NTR donation to CM Relief Funds: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில மழை வெள்ள பாதிப்புகளுக்கு உதவும் வகையில் ஜுனியர் என்டிஆர் மற்றும் கல்கி 2898AD படக்குழுவினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை வழங்கியுள்ளனர்.

ஆந்திர மாநில வெள்ள பாதிப்பு, ஜூனியர் என்டிஆர்
ஆந்திர மாநில வெள்ள பாதிப்பு, ஜூனியர் என்டிஆர் (Credits - ANI)

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழையால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் கர்ணூல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைப்பட துறையினர் பலர் நிதி வழங்கி வழங்கி வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சார்பில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள சேதத்தின் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில், ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்குகிறேன்” என்று ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898AD படக்குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவி வழங்கியுள்ளனர். இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்குகிறோம். ஆந்திர மாநிலம் எங்களுக்கு நிறைய வழங்கியுள்ளது. அதற்கு இந்த சவாலான சூழ்நிலையில் நன்றி செலுத்த விரும்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழையால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் கர்ணூல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைப்பட துறையினர் பலர் நிதி வழங்கி வழங்கி வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சார்பில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள சேதத்தின் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில், ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்குகிறேன்” என்று ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898AD படக்குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவி வழங்கியுள்ளனர். இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்குகிறோம். ஆந்திர மாநிலம் எங்களுக்கு நிறைய வழங்கியுள்ளது. அதற்கு இந்த சவாலான சூழ்நிலையில் நன்றி செலுத்த விரும்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இந்தியன் 2 சாதனையை டிக்கெட் முன்பதிவிலே முறியடித்த கோட்! - GOAT Advance booking

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.