ETV Bharat / business

EPFO ​​உறுப்பினர்கள் தனிப்பட்ட விவரங்களை இனி ஆன்லைனில் எளிதில் மாற்றலாம்! எப்படி தெரியுமா? - EPFO

அக்டோபர் 1, 2017 க்கு முன்பு UAN வழங்கப்பட்டிருந்தால், EPFO ​​(தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) இணையதளத்தில் உறுப்பினர்கள் நிறுவனங்களின் ஒப்புதல் இன்றி விவரங்களை மாற்ற முடியும்.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சின்னம்
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சின்னம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 3:16 PM IST

புதுடெல்லி: EPFO என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் உள்ள 7.6 கோடிக்கும் மேற்பட்ட ​​உறுப்பினர்கள், நிறுவனங்களின் ஒப்புதல் இன்றி, பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் மாற்றலாம், இதற்கான வசதி கடந்த சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், e-KYC EPF கணக்குகள் கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள், நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக ஆதார் OTP (ஒரு முறை கடவுச்சொல்) மூலம் தங்கள் EPF பரிமாற்ற கோரிக்கைகளை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா சனிக்கிழமை இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தினார். உறுப்பினர்கள் தெரிவிக்கும் குறைகளில் சுமார் 27 சதவீதம் சுயவிவரம்/KYC சிக்கல்கள் தொடர்பானவை என்றும், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்றும் கூறினார்.

EPFO இணையதளத்தின் செயல்முறையை ​​எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாய் பெயர், திருமண நிலை, மனைவி பெயர், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் வெளியேறும் தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களில் உள்ள மிகவும் பொதுவான பிழைகளை, நிறுவனங்களின் எந்த சரிபார்ப்பு அல்லது EPFO ​​ஒப்புதல் இல்லாமல், ஊழியர்கள் சுயமாக சரிசெய்ய அனுமதித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

அக்டோபர் 1, 2017 க்குப் பிறகு (ஆதார் கட்டாயமாக்கப்பட்டபோது) UAN (உலகளாவிய கணக்கு எண்) வழங்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எந்த துணை ஆவணமும் தேவையில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். அக்டோபர் 1, 2017 க்கு முன்பு UAN வழங்கப்பட்டிருந்தால், EPFO ​​இன் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்கள் விவரங்களை சரிசெய்ய முடியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துணை ஆவணங்களின் தேவையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

2024-2025-ல் நிறுவனங்களில் EPFO ​-க்கு அனுப்பப்பட்ட 8 லட்சம் கோரிக்கைகளில், 40 சதவீதம் மட்டுமே 5 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டதாகவும், 47 சதவீதம் 10 நாட்களுக்குப் பிறகு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது, ​​வேலைமாற்றம் செய்தால், PF கணக்கை மாற்றுவதற்கான அனைத்து ஆன்லைன் கோரிக்கைகளுக்கும் EPFO ​​க்கு சமர்ப்பிப்பதற்கு முன்பு நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில், இடமாற்றங்களைச் சரிபார்க்க EPFO ​​க்கு கோரிக்கை வருவதற்கு முன்பு சராசரியாக 12 முதல் 13 நாட்கள் வரை நிறுவனங்களால் எடுத்துக் கொள்ளப்படுவதாக அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறினார்.

புதுடெல்லி: EPFO என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் உள்ள 7.6 கோடிக்கும் மேற்பட்ட ​​உறுப்பினர்கள், நிறுவனங்களின் ஒப்புதல் இன்றி, பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் மாற்றலாம், இதற்கான வசதி கடந்த சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், e-KYC EPF கணக்குகள் கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள், நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக ஆதார் OTP (ஒரு முறை கடவுச்சொல்) மூலம் தங்கள் EPF பரிமாற்ற கோரிக்கைகளை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா சனிக்கிழமை இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தினார். உறுப்பினர்கள் தெரிவிக்கும் குறைகளில் சுமார் 27 சதவீதம் சுயவிவரம்/KYC சிக்கல்கள் தொடர்பானவை என்றும், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்றும் கூறினார்.

EPFO இணையதளத்தின் செயல்முறையை ​​எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாய் பெயர், திருமண நிலை, மனைவி பெயர், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் வெளியேறும் தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களில் உள்ள மிகவும் பொதுவான பிழைகளை, நிறுவனங்களின் எந்த சரிபார்ப்பு அல்லது EPFO ​​ஒப்புதல் இல்லாமல், ஊழியர்கள் சுயமாக சரிசெய்ய அனுமதித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

அக்டோபர் 1, 2017 க்குப் பிறகு (ஆதார் கட்டாயமாக்கப்பட்டபோது) UAN (உலகளாவிய கணக்கு எண்) வழங்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எந்த துணை ஆவணமும் தேவையில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். அக்டோபர் 1, 2017 க்கு முன்பு UAN வழங்கப்பட்டிருந்தால், EPFO ​​இன் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்கள் விவரங்களை சரிசெய்ய முடியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துணை ஆவணங்களின் தேவையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

2024-2025-ல் நிறுவனங்களில் EPFO ​-க்கு அனுப்பப்பட்ட 8 லட்சம் கோரிக்கைகளில், 40 சதவீதம் மட்டுமே 5 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டதாகவும், 47 சதவீதம் 10 நாட்களுக்குப் பிறகு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது, ​​வேலைமாற்றம் செய்தால், PF கணக்கை மாற்றுவதற்கான அனைத்து ஆன்லைன் கோரிக்கைகளுக்கும் EPFO ​​க்கு சமர்ப்பிப்பதற்கு முன்பு நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில், இடமாற்றங்களைச் சரிபார்க்க EPFO ​​க்கு கோரிக்கை வருவதற்கு முன்பு சராசரியாக 12 முதல் 13 நாட்கள் வரை நிறுவனங்களால் எடுத்துக் கொள்ளப்படுவதாக அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.