ETV Bharat / bharat

ஜூன் 26ல் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவில் விசாரணை! உச்ச நீதிமன்றத்தின் ஒத்திவைப்புக்கு என்ன காரணம்? - Delhi Excise policy case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 3:58 PM IST

பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை ஜூன் 26ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Etv Bharat
Delhi Chief Minister Arvind Kejriwal (ETV Bharat)

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீனுக்கு தடை விதித்து தீர்ப்பு வெளியிட்டது.

இந்நிலையில், டெல்லி உயர் நிதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி தலைமையிலான அமர்வு, பொதுவாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைக்காது என்றும், விசாரணையிலேயே தீர்ப்பு வெளியிடப்படும் என்றனர்.

ஆனால், ஜாமீனுக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட மனுவின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்து இருப்பது வழக்கத்திற்கு மாறான செயல் என்பதால் பொறுத்திருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர். மேலும் வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, பணம் மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், விரைவில் அந்த மனு குறித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் உயர் நீதிமன்றம் தலையிட்டு உள்ளதால் உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்றும் காத்திருந்து வழக்கு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்குவோம் என்றும் கூறினர். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் வழங்கியது.

பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி மாலை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வாதாட போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் விசாரணை நீதிமன்றம் அவசரகதியில் தீர்ப்பு வழங்கியதாக அமலாக்கத்துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனியார் பேருந்து விபத்தில் பெண் பலி! மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! - Hyderabad Bus accident

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீனுக்கு தடை விதித்து தீர்ப்பு வெளியிட்டது.

இந்நிலையில், டெல்லி உயர் நிதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி தலைமையிலான அமர்வு, பொதுவாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைக்காது என்றும், விசாரணையிலேயே தீர்ப்பு வெளியிடப்படும் என்றனர்.

ஆனால், ஜாமீனுக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட மனுவின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்து இருப்பது வழக்கத்திற்கு மாறான செயல் என்பதால் பொறுத்திருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர். மேலும் வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, பணம் மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், விரைவில் அந்த மனு குறித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் உயர் நீதிமன்றம் தலையிட்டு உள்ளதால் உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்றும் காத்திருந்து வழக்கு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்குவோம் என்றும் கூறினர். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் வழங்கியது.

பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி மாலை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வாதாட போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் விசாரணை நீதிமன்றம் அவசரகதியில் தீர்ப்பு வழங்கியதாக அமலாக்கத்துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனியார் பேருந்து விபத்தில் பெண் பலி! மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! - Hyderabad Bus accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.