ETV Bharat / bharat

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியது என்ன? - pm modi independence Day speech

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 3:53 PM IST

பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபவர்கள் உடனே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி சுதந்திர தின உரை
பிரதமர் மோடி சுதந்திர தின உரை (Image Credit - ANI)

டெல்லி: நாட்டின் 78 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்னாளை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் பேசினார். அப்போது, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் குறித்து தாம் மனவேதனை அடைவதாக மோடி தெரிவித்தார்.

"பெண்களுக்கு எதிராக நாட்டில் நிகழும் வன்கொடுமைகள் குறித்த எனது மனவேதனையை மீண்டுமொருமுறை டெல்லி செங்கோட்டையில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அட்டூழியங்களை நாம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நாடு, சமூகம் மற்றும் மாநில அரசுகள் இந்த விஷயத்தை தீவிரமாக கருதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று மோடி வலியுறுத்தினார்.

"பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, இக்கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் விரைந்து அளிக்கப்பட வேண்டும். யாரும் இனி இதுபோன்ற குற்றங்களை செய்ய துணியாத அளவுக்கு அந்த தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும்" என்று பிரதமர் வலியுறுத்தினார்.

"பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் நிகழும்போது, அவை பரவலாக பேசப்படுகின்றன. ஆனால் அதுவே, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்கப்படும்போது அவற்றை ஊடகங்கள் பெரிதாக பேசுவதில்லை. ஆனால், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை போன்றே இக்குற்றச் செயல்களில் தண்டனைக்கு ஆளாவோர் குறித்தும் பரவலாக பேசப்பட வேண்டும்" என்றும் பிரதமர் பேசினார்.

சமுதாய மாற்றத்துக்கு பெண்களின் பொருளாதார சுதந்திரம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து வருகிறது. பணிக்குச் செல்லும் மகளிருக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் குறித்து சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்!

டெல்லி: நாட்டின் 78 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்னாளை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் பேசினார். அப்போது, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் குறித்து தாம் மனவேதனை அடைவதாக மோடி தெரிவித்தார்.

"பெண்களுக்கு எதிராக நாட்டில் நிகழும் வன்கொடுமைகள் குறித்த எனது மனவேதனையை மீண்டுமொருமுறை டெல்லி செங்கோட்டையில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அட்டூழியங்களை நாம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நாடு, சமூகம் மற்றும் மாநில அரசுகள் இந்த விஷயத்தை தீவிரமாக கருதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று மோடி வலியுறுத்தினார்.

"பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, இக்கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் விரைந்து அளிக்கப்பட வேண்டும். யாரும் இனி இதுபோன்ற குற்றங்களை செய்ய துணியாத அளவுக்கு அந்த தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும்" என்று பிரதமர் வலியுறுத்தினார்.

"பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் நிகழும்போது, அவை பரவலாக பேசப்படுகின்றன. ஆனால் அதுவே, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்கப்படும்போது அவற்றை ஊடகங்கள் பெரிதாக பேசுவதில்லை. ஆனால், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை போன்றே இக்குற்றச் செயல்களில் தண்டனைக்கு ஆளாவோர் குறித்தும் பரவலாக பேசப்பட வேண்டும்" என்றும் பிரதமர் பேசினார்.

சமுதாய மாற்றத்துக்கு பெண்களின் பொருளாதார சுதந்திரம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து வருகிறது. பணிக்குச் செல்லும் மகளிருக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் குறித்து சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.