ETV Bharat / bharat

இயல்பு நிலை திரும்பும் விமான நிலையங்கள்- மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்! - Airports working normally

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 11:43 AM IST

நாடு முழுவதும் விமான போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Representational image (AP Photo)

டெல்லி: மைக்ரோசாப்ட் மென்பொருள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் வங்கிகள், விமான சேவை, பங்கு சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் 365 மென்பொருளை விமான நிறுவனங்கள், வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஏராளமானோர் பயன்படுத்தி வருவதால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமான நிலையங்களில் விமான சேவைகளில் கடும் பாதிப்புக்குள்ளாகின. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா போன்ற விமான நிறுவனங்களின் சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டது இதனால் விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இந்தியாவில் இண்டிகோ உள்பட பல நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். விமான புக்கிங்கை வேறு நாளுக்கு மாற்றி தர விமான நிறுவனங்கள் முன் வந்தது. பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு முழு பணமும் தரப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 56 விமானங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்படக்கூடியவை என சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் கிரவுட்ஸ்ட்ரைக்கில் நிலவும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு நாளாக சிக்னல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளதாகவும், மெல்ல விமான சேவைகள் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று மதியத்திற்குள் அனைத்து தொழில்நுட்ப பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு முழு அளவில் விமான போக்குவரத்து சீர்செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா! என்ன காரணம்? - UPSC Chairman Manoj Soni Resign

டெல்லி: மைக்ரோசாப்ட் மென்பொருள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் வங்கிகள், விமான சேவை, பங்கு சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் 365 மென்பொருளை விமான நிறுவனங்கள், வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஏராளமானோர் பயன்படுத்தி வருவதால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமான நிலையங்களில் விமான சேவைகளில் கடும் பாதிப்புக்குள்ளாகின. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா போன்ற விமான நிறுவனங்களின் சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டது இதனால் விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இந்தியாவில் இண்டிகோ உள்பட பல நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். விமான புக்கிங்கை வேறு நாளுக்கு மாற்றி தர விமான நிறுவனங்கள் முன் வந்தது. பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு முழு பணமும் தரப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 56 விமானங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்படக்கூடியவை என சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் கிரவுட்ஸ்ட்ரைக்கில் நிலவும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு நாளாக சிக்னல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளதாகவும், மெல்ல விமான சேவைகள் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று மதியத்திற்குள் அனைத்து தொழில்நுட்ப பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு முழு அளவில் விமான போக்குவரத்து சீர்செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா! என்ன காரணம்? - UPSC Chairman Manoj Soni Resign

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.