ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று (ஜூலை 5) நடந்த படியேற்பு விழாவின் ஒரு பகுதியாக யானை மீது ஐயப்பன் சுவாமி சிலை திருவீதி உலா நடைபெற்றது. செண்டை மேளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானையில் ஐயப்பன் சுவாமி திருவீதி உலா தொடங்கியது. திருவீதி உலாவில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நெய் தீபம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியை பொதுமக்கள் குடும்ப விழாவாக கொண்டாடினர்.