தொடர் கனமழை: அப்பர் ஆழியாற்றில் வெள்ளம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நவமலை பகுதியில் மின்சார ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் குடும்பங்கள் 350க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில தினங்களாக, மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் அப்பர் ஆழியார் நிறைந்து ஓடுகிறது. மேலும், ஆற்றில் அதிக நீர் வந்தால் பாலத்திற்கு மேல் வரும் சூழ்ல் உள்ளது. இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைவாழ் மக்களை அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.