முல்லை பெரியாறில் புதிய அணை கட்டக்கூடாது - அமைச்சர் துரைமுருகன் உறுதி
வேலூர்:தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் வேலூர் காட்பாடி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்காளிடம் பேசிய அவர், “முல்லைபெரியாறு அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகும் புதிய அணை கட்டப்படும் என கேரள ஆளுநர் கூறுவது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார். அரசியல் சட்டத்தையும் மதிக்கவில்லை, நீதிமன்றத்தையும் மதிக்கவில்லை. அணைகட்டுவதில் கேரளா எந்த அளவுக்கு உறுதியாக உள்ளதோ, அதேபோல் அணை கட்டக்கூடாது என்பதில் அதைவிட தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Duraimurugan Press Meet