'450 கலைஞர்கள்' 'குச்சிப்புடி, மோகினி ஆட்டம்' - சிவராத்திரியை முன்னிட்டு 'மயூர நாட்டியாஞ்சலி'நிகழ்ச்சி
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற 'மயூர நாட்டியாஞ்சலி' நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட பல்வேறு நாட்டியக்கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய, நாடகங்களை அரங்கேற்றியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பரதம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நிகழ்வுகளை நடத்தவுள்ளனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், இந்தியாவில் உள்ள மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் சுமார் 450 நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.