தமிழ்நாடு

tamil nadu

குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

ETV Bharat / videos

பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 4:03 PM IST

தென்காசி:மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகக் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

மேலும், அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும் சூழலில், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்துச் சீராக உள்ளது.

இந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்குப் படையெடுத்து உள்ளனர். இன்றைய தினம் (ஜன.16) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த வண்ணமாகவே காணப்படுகின்றனர்.

மேலும், மெயின் அருவி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. காலை முதலே ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி நீரில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளியல் போட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் மழைப்பொழிவு காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் சுற்று வட்டார வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details