தமிழ்நாடு

tamil nadu

வெள்ளத்தில் அடித்துச் சென்ற கார்

ETV Bharat / videos

கோபி அருகே வெள்ளத்தில் அடித்துச் சென்ற கார்; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மூவர்!

By

Published : May 3, 2023, 3:15 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கோபி - நம்பியூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையால் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட குழி, நிரம்பி மழை நீர் வெள்ளம் போல சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்திலிருந்து நம்பியூர் செல்வதற்காக 3 இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒட்டர் கரட்டுப்பாளையம் அருகே இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது மழை நீர் தேங்கியிருந்த சாலையை காரில் கடக்க முயன்றனர். அப்போது மழை நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டு பாலம் கட்டும் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் தள்ளப்பட்டது. 

இதில் காரில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் காரை விட்டு உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கடத்தூர் காவல் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்த கார் கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் அந்த சாலையில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வேறு சாலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details