தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 17, 2019, 2:28 PM IST

ETV Bharat / state

அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்குவதில் அலட்சியம் செய்யும் அலுவலர்கள்!

விருதுநகர்: தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்குவதில் அலட்சியம் செய்த அலுவலர்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு அறிவித்த நிவாரண தொகையை வழங்குவதில் அலட்சியம் செய்யும் அதிகாரிகள்

2018ஆம் ஆண்டு மானாவாரி பயிர் விளைவித்து படைப்புழு தாக்குதலால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அந்த உத்தரவின்பேரில் அளித்திருந்த மனுவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை வருவாய்த் துறை அலுவலர்கள் இதுவரை முறையாக வழங்கவில்லை என்று விவசாயிகள் சங்கத்தினர் சிவகாசியில் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு வருவாய் கோட்டாட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் விரைவில் நிவாரணத் தொகையை முழுவதுமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details