தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 28, 2021, 8:54 AM IST

ETV Bharat / state

காரியப்பட்டியில் அம்மா, மகள், பேத்தி என மூவர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர்: காரியப்பட்டியில் அம்மா, மகள், பேத்தி என மூன்று பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

suicide

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிழவனேரியைச் சேர்ந்த அடைக்கலம் (65). இவர் கணவரை இழந்த நிலையில் வாழ்ந்துவந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்.

மகள் முனியம்மாளை முஷ்டக்குறிச்சி கிராமத்தில் திருமணம் செய்துகொடுத்து அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். இரண்டு மாததிற்கு முன்பு முனியம்மாள் தன் அண்ணன் மகன் பொறியியல் பட்டதாரியான முத்துகுமாருக்கு திடீரென 16 வயது மகள் ஜெயலலிதாவை திருமணம் செய்துவைத்துள்ளார்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அடைக்கலம் தனது மகள் முனியம்மாளுடன் முஷ்டக்குறிச்சி வீட்டில் வந்து தங்கியுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு ஜெயலலிதாவை முத்துகுமார் முஷ்டக்குறிச்சியில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 27) மூவரும் வீட்டிற்குள் இறந்துகிடந்தனர்.

இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் விற்பனையாகும் ரெமிடெசிவிர் மருந்து: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details