தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 28, 2019, 5:58 PM IST

ETV Bharat / state

காவலரின் வீட்டில் தங்க நகை கொள்ளை

விருதுநகர்:காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft
theft

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராசபுரம் மாசானம் கோவில் பகுதியில் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருவர் கன்னிராஜ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் உள்ளே சென்று பார்த்த போது 4 பவுன், 3 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர். காவல் துறையில் பணிபுரிவரின் வீட்டில் திருட்டு நடந்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details