விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பின்னர், மனைவி கனகா, மகன் நிரஞ்சன் குமார் ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
கனகா தனது வீட்டின் அருகில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
தந்தை மறைவுக்கு பின்னர் நிரஞ்சன் தன்னைப் பார்க்க வரும் உறவினர்கள் செலவுக்காக கொடுக்கும் ரூ100, 200, எனக் கொடுக்கும் பணத்தை சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தொற்று அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் கரோனா நிதி கொடுக்க முன்வர வேண்டி தொலைக்காட்சி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.