தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2019, 3:53 PM IST

ETV Bharat / state

’ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவரும் ஐஐடி’ - கி.வீரமணி குற்றச்சாட்டு

விருதுநகர்: ஐஐடி தற்போது ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவருகிறது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

veeramani

விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டில் கலந்துகொண்ட திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”காமராஜர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது நீட் என்ற தேர்வை கொண்டு வந்து பல உயிர்பலிகள் நடந்துள்ளன. கலைஞர் ஆட்சியில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள ம௫த்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் படிக்கும் சூழல் உருவாகியுள்ளது, இதில் ஆள் மாறாட்டம் வேறு நடைபெறுகிறது. நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வள்ளுவருக்கு எந்த மதமோ, ஜாதியோ, இனமோ இல்லை, அவருக்கு சாயம் பூசி மதம் பிடிக்க வைக்கக்கூடாது. ஐஐடி தற்போது ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவருகிறது என குற்றஞ்சாட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் கீ.வீரமணி

மேலும், தாழ்த்தப்பட்டவர்களை புறந்தள்ளுகிறார்கள், ஒதுக்கி வைக்கிறார்கள் தமிழ்நாட்டிற்கே இது அவமானம், பேராசிரியரை நீக்கம்செய்வது மட்டுமின்றி சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணை நேர்மையாக நடக்கும் என தாம் நம்புவதாகவும் வீரமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’பாத்திமாவின் தற்கொலைக்கு மத ரீதியான தாக்குதலே காரணம்’

ABOUT THE AUTHOR

...view details