தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 22, 2019, 12:58 PM IST

ETV Bharat / state

12 ஆயிரம் பனை விதைகள் நடவு - அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!

விருதுநகா்: சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் 12 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்து அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

virudhunagar

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். விஜயகரிசல்குளம் பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கும் பாண்டி கண்மாய் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் குடிமராமரத்துப் பணிகள் மூலம் புனரமைக்கப்பட்டது.

அதனை சிறப்பிக்கும் விதமாக அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 12 ஆயிரம் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கண்மாயின் இருபக்களிலும் பனை விதைகளை நடவு செய்தனர்.

12 ஆயிரம் பனை விதைகள் நடவு

இதில் பனை மரத்தின் சிறப்பு குறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மாணவ, மாணவிகளின் இந்த முயற்சியை அப்பகுதிமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பனை விதைப்போம் அமைப்பின் சார்பில் 15 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

ABOUT THE AUTHOR

...view details