தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 13, 2020, 2:04 PM IST

ETV Bharat / state

காணாமல் போன இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த இளம்பெண், இன்று கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்
கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

ஸ்ரீவில்லிபுத்தூர், பொட்டல்பட்டியிலுள்ள அருந்ததியர் காலணி பகுதியில் வசித்து வருபவர்கள் முனியாண்டி - கிருஷ்ணம்மாள் தம்பதியினர். இவர்களின் மகள் மகாலட்சுமி (வயது 21) தனியார் மில்லில் பணியாற்றி வந்தார். மகாலட்சுமியைக் காணாமல் கடந்த மூன்று நாட்களாக அவரது பெற்றோர் தேடி வந்த நிலையில், இன்று கிணற்றில் சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னியம்பட்டி காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அப்பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த வன்னியம்பட்டி காவல் துறையினர், சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கொளத்தூர் தனியார் பள்ளியில் உணவுத் திருவிழா

ABOUT THE AUTHOR

...view details