விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம்(45). சிங்கப்பூரில் லேப் டெக்னீசியனாகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி, தந்தை கவனித்து வந்த விவசாயத்தை செய்யத் தொடங்கினார். தங்களது நிலத்தில் நடைமுறையில் இருந்த வாய்க்கால் பாசனத்தை மாற்றி புதிய பாசன முறையான சொட்டுநீர் பாசனமுறையை புகுத்தியுள்ளார். சொட்டு நீர் பாசனமுறையில் அதிக மகசூலைப் பெறமுடியும் என்பதையும் அவர் அவ்வூர் மக்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்.
சொட்டு நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள், ஏழை விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மானியங்களை முற்றாக நிராகரித்துள்ளார் ஆதிமூலம். தனது சொந்த முதலீட்டில் விவசாய இயந்திரங்களை வாங்கி தற்போது, கொய்யா சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். 2 ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்துவரும் இவர், வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதாகத் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "வெளிநாட்டில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தேன். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தாலும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து இருந்திருந்தது வருத்தமளித்தது. 90 வயது நிரம்பிய எனது தந்தைக்கு திடீரென உடல் நிலை சரியில்லாது போக, அவருடன் இருக்க விரும்பி சிங்கப்பூரில் பார்த்த வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பினேன்.