தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2020, 12:12 PM IST

ETV Bharat / state

சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் உயிரிழப்பு !

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

பக்தர் உயிரிழப்பு
பக்தர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஐப்பசி மாதம் பௌர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முதல் அக்டோபர் 31வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு காலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து கொண்டு வந்த நிலையில் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் கோணத் தலைவாசல் என்னும் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அவரது உடலைக் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ”நான் இஸ்லாமியரோ, சீக்கியரோ அல்ல, இந்து... இந்து மதம் குறித்துதான் என்னால் பேச முடியும்” - திருமாவளவனுடன் சிறப்பு நேர்காணல்!

ABOUT THE AUTHOR

...view details