தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2020, 11:03 AM IST

ETV Bharat / state

கார் மீது 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர்: தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கார் மீது 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்
கார் மீது 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோயில் பகுதியில் இருக்கும் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி சென்ற காரும், ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் செளர்ந்தர பாண்டியன், தங்கவேலு, மகாலிங்கம், நம்பியார், முனீஸ்வரி, பார்த்தசாரதி, ரேவதி, ஜோதிலட்சுமி என 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மகாலிங்கம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடிச் சென்ற நபர் : காவல்துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details