தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2022, 2:11 PM IST

ETV Bharat / state

பெண் எஸ்பி பாலியல் வன்கொடுமை வழக்கு - சேலம் முன்னாள் எஸ்பி சாட்சியம்!

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சேலம் மாவட்ட முன்னாள் எஸ்பி குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்டியம் அளித்தார்.

Villupuram
Villupuram

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு இன்று(செப்.28) நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியான சேலம் மாவட்ட முன்னாள் எஸ்பி குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details